என் மலர்
நீங்கள் தேடியது "summer festival"
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக் கப்பட்டிருந்தது.
விளையாட்டு போட்டிகளும் மலை வாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.
நேற்றுடன் விழா நிறைவடைந்து பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் தனலட்சுமி வரவேற்றார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறை களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளர்ச்சி பெற்றது. இது வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.
முதன் முதலாக 26 ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலையில் கோடை விழா ஆரம்பித்தது தி.மு.க.ஆட்சியில்தான். மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மினி பஸ் வசதி குடிநீர் வசதி போன்றவை தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான்" என்று கூறினார்.
கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-
கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 நாட்கள் நடக்கும் இந்த கோடை விழாவில் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் மாநில தட கள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.
- மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 23-வது கோடை விழா இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கோடை விழா நடந்த வளாகத்தில் வண்ண, வண்ண மலர்கள் ெகாண்ட தோரணங்கள், மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் கொண்டு அனைவரையும் கண்கவரும் வகையில் வடிவமை க்கப்பட்டு இருந்தது.
ேமலும் முக்கிய சந்திப்பு இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
கோடை விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்து. காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் போலீசார் மோப்ப நாய்களின் நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சாகச விழிப்புணர்வு நிகழச்சிகளும் நடந்தது.
வேளாண்மை துறை மற்றும் தோட்டக்க லைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மலர் மற்றும் காய்கறி கண்காட்சி அணைவரையும் கவர்ந்து இழுத்தது. ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனை சந்தையும் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடக்கும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் தொடக்கமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, சமூகநலத்துறை, மகளிர் திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை சார்பில் பெண்களுக்கான கோலப் போட்டி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு என தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
கலை பண்பாட்டுத்துறை. சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித் துறை மூலமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள். பாடல்கள், விளையா ட்டுகள், உணவு வகைகள் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கண்காட்சி அரங்கங்களில் அரசு திட்டங்கள் குறித்த விளக்க மாதிரிகள் மற்றும் குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும், துறை சார்ந்த அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க கையேடுகள் மற்றும்துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இன்று நடந்த கோடை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டதால் அந்த பகுதியில் விழாக்கோலம் பூண்டது.
இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளத்தாளங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ் 6000 பயனாளிகளுக்கு ரூ. 500 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோடை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 86 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், செய்து முடிக்கப்பட்ட 583 பணிகளின் திறப்பு விழா மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள 380 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா என மொத்தம் ரூ.580.68 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் வருகையால் திருவண்ணாமலையில் தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்
- தி.மு.க.வினர் ஏற்பாடு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நாளை 23-வது கோடை விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து கீழ்பென்னாத்தூரில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ. எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் குப்புசாமி, தேவேந்திரன், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. நிர்வாகிகள் பரசுராமன், செல்வமணி இளைஞரணி சதீஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியிலும் தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் அன்பு தலைமையில் நடந்தது.
- ஜவ்வாது மலை கோடை விழாவுக்கு வருகிறார்
- எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
கலசபாக்கம்:
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஜவ்வாதுமலையில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் கலசபாக்கம் சரவணன், செங்கம் கிரி ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் வருகிற 18-ந் தேதி ஆலங்காயத்திலிருந்து ஜமுனாமரத்தூருக்கு வருகை தர இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எல்லை பகுதியில் பல்லாயிர க்கணக்கானோர் திரண்டு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. பின்னர் நடக்கும் சுற்றுலா மாளிகை திறப்பு விழா, கலைஞர் நினைவு நூற்றாண்டு
பயணியர் நிழற்கூடம் திறப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டு உற்று சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது.
பின்னர் கோடை விழா விற்காக பிரமாண்டமாக அமைக்க ப்பட்டு வரும் பந்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது.
- இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெய்தல் கோடை விழாவை தொடங்கி வைத்து மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசுகையில், கடலுார் சில்வர் பீச்சில் அடுத்தாண்டு நடக்கும் விழாவில், பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். தோட்டக்கலைத் துறை மூலமாக நெய்தல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தருமாறு கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடக்கும் ஹேப்பி ஸ்டீரிட் விழாவைப் போன்று, கடலுாரில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கோடை விழா நடத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்திற்கு கடந்தாண்டு 19 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த மாதம் வரை 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது ஜெகதீஸ்வரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகர தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி, ஆராமுது, ஹேமலதா சுந்தரமூர்த்தி, சாய்ந்துனிஷா சலீம், பார்வதி, சசிகலா ஜெயசீலன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா ரங்கநாதன், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், கார் வெங்கடேசன், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் கொடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுக்களிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா , சங்கீதா, கவுன்சிலர்கள் ஆராமுது , சுபாஷ்ணி ராஜா, பார்வதி, சுதா, செந்தில்குமாரி, சசிகலா ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் லெனின், கார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
- நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும். இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன.
இந்த நிலையில் தென்னகப் பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் கோடை விழா-2023 முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்,
கைவினை கலைஞர்களின் பொருட்காட்சி விற்பனை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நாளை (புதன்கிழமை ) மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்த கலை விழா தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாமல் பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் திருச்சியிலும் நடைபெறும்.
இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கலை விழாவுக்கு முன்னோட்டமாக தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை 6.30 மணிக்கு வாராந்திர கலை விழா தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படு த்தவும், கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளது.
நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.
அனைவரும் கோடை விழாவுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஐயர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் குளுகுளு சீசனையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் வெகுவிமரிசையாக தொடங்கியது.
இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களாலான திருவள்ளுவர் சிலை, மயில் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முதன்முறையாக 6 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இதனிடையே நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே நேற்று காலை சுமார் 11 மணி முதல் மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அடிக்கடி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். நேற்று மாலையில் கொடைக்கானலில் இருந்து திரும்பிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் சீரமைப்பு பணிகள் காரணமாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
மலர் கண்காட்சி குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியராஜன், பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் கூறுகையில், மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடந்த 6 நாட்களில் சுமார் 56 ஆயிரத்து 785 பேர் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு சுமார் ரூ.17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்றனர்.