search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumurthimalai"

    • மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.
    • அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன் பூங்கா என பல்வேறு சுற்றுலா அம்சங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், விடுமுறை காலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.

    அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்துக்கு தனியாக உதவி சுற்றுலா அலுவலர் நியமிக்கப்பட்ட பிறகு திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தி வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகியுள்ளது. இந்தாண்டும் கோடை விழா குறித்த எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.
    • 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும் திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன்காட்சியகம், காண்டூர் கால்வாய் என சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமூர்த்தி அணையின் கரையில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்படுகிறது.கடந்த 2007ல் முதன்முறையாக அணைக்கரையில், பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பினர். பின்னர் பல கட்டங்களாக இக்கருத்துரு மாற்றியமைக்கப்பட்டது.முதற்கட்டமாக அணை கரையில் 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. முதலில் 45 லட்சம் ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

    ஆனால் பூங்கா அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பணியும் இதுவரை துவங்கவில்லை.திருமூர்த்திமலையில் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொலிவிழந்து வருகிறது. சுற்றுலா சார்ந்த வர்த்தகம் முடங்கி அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அணையை ஒட்டிய பகுதி தரிசு நிலம் போல மாறியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவியது.

    அதற்கேற்ப மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் தலைமையில் ஒரு குழுவினர் பல முறை, திருமூர்த்திமலையில் ஆய்வு செய்தனர்.தன்னார்வலர்களை உள்ளடக்கிய சுற்றுலா வளர்ச்சிக்குழுவும் கடந்தாண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரே ஒரு தகவல் பலகை மட்டும் காண்டூர் கால்வாய் அருகே வைக்கப்பட்டது. இவ்வாறு திருமூர்த்தி அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் திட்டம் அரசுத்துறைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாடு குறித்து தேர்தல் வாக்குறுதி வழங்குவது, தவறாமல் நடக்கிறது. தேர்தல் வெற்றிக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை.பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருமூர்த்திமலை வந்த அமைச்சர்களும் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவது தொடர்கதையாக உள்ளது.

    உடுமலை வட்டாரத்தை `இது திருமூர்த்திமலை மண்ணு'என பிற பகுதியினர் குறிப்பிடும் அளவுக்கு பெயர் பெற்ற திருமூர்த்திமலையின் மேம்பாட்டில் இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதே போல் அமராவதி அணைக்கரையிலும் பூங்கா பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையங்களான திருமூர்த்திமலை, அமராவதி அணை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது.
    • அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையாகவும் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் நகரில் எப்போதும் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நகரில் பெய்யும் மழை காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வெள்ளம் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசன திட்டங்கள் மற்றும் இறவைப்பாசனம் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப நீர் நிலைகள் நிரம்பி இரு கரைகளையும் தொட்டுச்சென்று வேளாண்மை செழிக்க செய்யும் நீர் நிலைகளுக்கும், விதைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், கிராமங்களில் முளைப்பாரி இட்டு, ஆடிப்பெருக்கு அன்று, ஆறுகள், கால்வாய்களுக்கு எடுத்து வந்து, சுவாமியை வணங்கி, ஆறுகளில் முளைப்பாரி விட்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு காரணமாக கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றுதல், கன்னிப்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக நீரிலும், நிலத்திலும் விளையாடி மகிழும் விழாவாகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும் திருமூர்த்தி அணையில் பஞ்சலிங்கம் அருவி, மும்மூர்த்திகள் எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், அணை என சுற்றுலா மையமாக உள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் 'ஆடிப்பெருந்திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் பெரிய அளவிலான அரங்கு அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.அதோடு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதோடு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை. நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி, 'ஆடி 18' வருவதால் நடப்பாண்டு திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
    • மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மலைவாழ் மக்களிடம், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு மலைவாழ் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு டவர் லைன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    மேலும் குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, மாவடப்பு உள்ளிட்ட அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர்.திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதியில் ஆய்வு செய்த போது 17வது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி, குடியிருப்பு தலைவர் கோபால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×