search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Current year"

    • மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசன திட்டங்கள் மற்றும் இறவைப்பாசனம் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப நீர் நிலைகள் நிரம்பி இரு கரைகளையும் தொட்டுச்சென்று வேளாண்மை செழிக்க செய்யும் நீர் நிலைகளுக்கும், விதைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், கிராமங்களில் முளைப்பாரி இட்டு, ஆடிப்பெருக்கு அன்று, ஆறுகள், கால்வாய்களுக்கு எடுத்து வந்து, சுவாமியை வணங்கி, ஆறுகளில் முளைப்பாரி விட்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு காரணமாக கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றுதல், கன்னிப்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக நீரிலும், நிலத்திலும் விளையாடி மகிழும் விழாவாகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும் திருமூர்த்தி அணையில் பஞ்சலிங்கம் அருவி, மும்மூர்த்திகள் எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், அணை என சுற்றுலா மையமாக உள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் 'ஆடிப்பெருந்திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் பெரிய அளவிலான அரங்கு அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.அதோடு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதோடு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை. நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி, 'ஆடி 18' வருவதால் நடப்பாண்டு திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×