search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Festival"

    • 1008 பால்குட ஊர்வலம்
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள படவேட்டம்மன் கோவிலில் 44 -வது ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு படவேட்டம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள்,அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

    ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடி 4-வது வெள்ளி பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. பாலாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் வாலாஜா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோவிலில் படவேட்டம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
    • சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.

    வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.

    இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.

    4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.

    வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.

    மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.

    பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்

    முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.

    இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.

    பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.

    சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.

    இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்

    சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.

    அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    • கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார்.
    • அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள்.

    சுயம்பு மூர்த்தி யான பவானி அம்மன் கவசம் பெற்று முன்புறம் அமர்ந் திருக்கிறாள். பின்புறம் சிலை வடிவில் சுதையில் அவள் அழகான உருவம் வடிவமைக் கப்பட்டதைக் காணலாம்.

    ஐந்து தலைநாகம் திருக்குடை கவிழ்க்க அன்னை சந்நிதி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.

    பட்டுப்புடவை பளபளக்கும் மேனி, பரந்தமுக அழகில் எடுப்பான மூக்கு, அதில் மின்னித் துடிக்கும் மூக்குத்தி, எழிலார்ந்த சிரிப்பு நம் இதயத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். நம்மையெல்லாம் காக்கும் கருணைக் கடலாகிய அவளுக்கு நான்கு கரங்கள்.

    வலது முன்புற கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம். இந்த கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

    பெரியபாளையத்தமன் உருவம் அமைந்திருக்கும் விதம் மிகவும் அலாதியானது. அரை உருவுடன் சங்கு சக்கர தாரிணியாக அமர்ந்து ஒரு கையில் வாளும், மறுகையில் அருள் பாலிக்கும் அமுத கலசமும் கொண்டு தோற்றமளிக்கும் அன்னையின் திருக்கோலத்தை வேறு எந்தக் கோவிலிலும் காண்பது அரிது.

    கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையின் மடியருகே அமைந்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவின் தோற்றம் காலத்தில் மிகமிகத் தொன்மை வாய்ந்ததாகும்.

    அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சிய ளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் நின்று பெரிய பாளையத்தில் அருளாட்சி செய்து வருகிறாள் பவானி என்னும் இந்த பெரிய பாளையத்தமன். இந்த சக்தியின் சக்தியை சக்தியால் உணர்ந்து சக்தியும் பெற்றோர் பலர்.

    கவி காளிதாசனுக்கு அருட்கவி பாடிட அருளிய வளும், அலையும் மனத்தால் அமைதி இழந்து நின்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், காளிதாசருக்கும் அமைதி வழிகாட்டி ஞானம் தந்தவளும் அன்னை பவானியே!

    ஓங்கார வடிவம் கொண்ட அன்னை பவானி ஆங்காரம் கொண்டோரையும், முறை தவறி அறநெறி பிறழ்வோரையும் வதம் செய்து அடக்கி மோன நிலையில் இருக்கிறாள்.

    நோயுற்று அல்லலுறுபவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தால் அவர்கள் நோயும், பாவமும் நிச்சயம் அகலும். தீமையைப் போக்கி நன்மையை நிலைநாட்டும் அன்னை தன் அருட்பார்வையாலும், தான் அணிந் திருக்கும் மஞ்சளாலும், தன்மேல் பட்ட தண்ணீராலும், தீர்க்க முடியாத பல நோய்களை எல்லாம் தீர்த்து அருள்கிறாள்.

    கோழி சுற்றி விடும் பிரார்த்தனை

    பெரியபாளையத்தம்மன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளில் "கோழி சுற்றி விடும் பிரார்த்தனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது "இது உயிருக்கு உயிர் கொடுக்கும்'' பிரார்த்தனை ஆகும்.

    வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அல்லது விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக பெரியபாளையத்தம்மனிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். உடல்நலம் சரியானதும் மாடு, ஆடு, கோழி போன்ற ஏதாவது ஒன்றை கோவிலில் விட்டு விடுவார்கள்.

    கோழி என்றால் தாயே இந்த உயிரை ஏற்றுக் கொள் என்று சுற்றி விடுவார் கள். ஆடு, கோழிகளை சுற்றி விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு என்றே பரசுராமர் சன்னதி அருகில் தனி இடம் உள்ளது. அங்கு விடப்படும் ஆடு, கோழிகள் பவானி அம்மனுக்கு சொந்தமானதாக மாறி விடும்.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியபாளையம் கோவிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. ரத்தம் ஆறாக ஓடும் வகையில் கூட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. உயிர்ப்பலி தடுப்பு நடவடிக்கை மூலம் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.

    அதற்கு பரிகாரமாக கோவில் சார்பில் ஒரு கோழியை உயிருடன் சுற்றி விட்டனர். அதைப் பார்த்து பக்தர்களும் ஆடு, கோழிகளை சுற்றி விடத் தொடங்கி விட்டனர். ஆடி மாத சிறப்பு நாட்களில் இங்கு ஏராளமானவர்கள் கோழி சுற்றி விடுவதை காணலாம்.

    • தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
    • 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.

    வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவி லில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதால் கோவிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.

    தற்போது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு பூச்சட்டுதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, விழா குழு உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி, ஜெய், ரமேஷ் பாபு, சுரேஷ்குமார், வினிதா மற்றும் ஏராளமான பக்தர் களும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

    தொடர்ந்து மாரியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம் மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல் மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருத மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருது மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திரு விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதை தொடர்ந்து பிஸ்கட் பாக்கெட் அலங்காரத்தில் செய்யப்பட்ட அம்மன் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரை பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு தேரை இழுத்தனர்.

    மேலும் பக்தர்கள் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் வேல் போட்டுக்கொண்டு டிராக்டர் உரல் இழுத்துச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இந்த திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மருத மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • பெண்கள் பால்குடம் ஊர்வலம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா முன்னிட்டு 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரையில் இருந்து பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மங்கள மேள வாதியுங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர்.

    • ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது.
    • ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கு கிராமத்தில் மன்னார்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பெரமையா கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இங்கு ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது. மேலும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முடியும் வரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் விமர்சையாக ஆடி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

    • ராமேசுவரம் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ஆடித் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் வாஸ்து ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ஒட்டி ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணை யர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள், பணி ணயாளர்கள் கலந்து கொண்டனர்.

    முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்டு 2-ந் தேதி மாலை மாற்றும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பர்வதவர்தனி அம்மன்-ராமநாதசாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும் நடைபெற உள்ளது. 8-ந் தேதி மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடைகிறது.

    ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு 17 நாட்களில் தினசரி சுவாமி-அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடாகி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடுமலை:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி பெருவிழா நடைபெறுவது வழக்கம் இதன்படி நாளை 22 ந்தேதி ஆடிப்பெரு விழா தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் ஆடி வெள்ளிக்கிழமையான வரும் 22ந்தேதி காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.23ந்தேதி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை ,28 ந்தேதி சர்வ ஆடி அமாவாசையை ஒட்டி அதிகாலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 29 ந்தேதி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஆகஸ்ட் 1ந்தேதி திருஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம் மகாதீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் நாகசதுர்த்தி விழா நடக்கிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மங்கள இசை ,4 -45 மணிக்கு அபிஷேகம் ,அலங்காரம் ,மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஆகஸ்ட் 3 -ந்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 10 மணிக்கு சேஷாட அபிஷேகம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    5 ந்தேதி மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருஞானம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபார நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11 ந்தேதி ஆடி மாத பௌர்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12 ந்தேதி ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமஞ்சனம் ,உச்சி கால பூஜை நிகழ்ச்சிகளும் ,மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்யு.எஸ்.எஸ். ஸ்ரீதர் செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசன திட்டங்கள் மற்றும் இறவைப்பாசனம் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப நீர் நிலைகள் நிரம்பி இரு கரைகளையும் தொட்டுச்சென்று வேளாண்மை செழிக்க செய்யும் நீர் நிலைகளுக்கும், விதைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், கிராமங்களில் முளைப்பாரி இட்டு, ஆடிப்பெருக்கு அன்று, ஆறுகள், கால்வாய்களுக்கு எடுத்து வந்து, சுவாமியை வணங்கி, ஆறுகளில் முளைப்பாரி விட்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு காரணமாக கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றுதல், கன்னிப்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக நீரிலும், நிலத்திலும் விளையாடி மகிழும் விழாவாகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும் திருமூர்த்தி அணையில் பஞ்சலிங்கம் அருவி, மும்மூர்த்திகள் எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், அணை என சுற்றுலா மையமாக உள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் 'ஆடிப்பெருந்திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் பெரிய அளவிலான அரங்கு அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.அதோடு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதோடு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை. நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி, 'ஆடி 18' வருவதால் நடப்பாண்டு திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×