search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரமையா கோவிலில் ஆடி திருவிழா
    X

    ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்.

    பெரமையா கோவிலில் ஆடி திருவிழா

    • ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது.
    • ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கு கிராமத்தில் மன்னார்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பெரமையா கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இங்கு ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது. மேலும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முடியும் வரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் விமர்சையாக ஆடி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×