என் மலர்
நீங்கள் தேடியது "muthumariamman temple"
- காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
- கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
பாகூரை அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை செடல் உற்சவம், காவடி பூஜை, மாட்டு செடல், சவப்பாடைசெடல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் பாகூர், குருவிநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்கா வலர் குழு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.
- மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
- விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகர், துர்க்கை நவகிரக மூர்த்திகள், முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கரி கோலம், அஷ்டாதச கிரியை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷேக்னஹோமம், தீபாராதனை முதற்கால யாக பூஜை நடக்கிறது.
27-ந்தேதி மஹாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், யாகசாலை நிர்மாணம்,வேதபாராயணம், தீபாராதனை இரண்டாம் கால பூஜையும் மாலை 6-மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்பணம், ரசாபந்தனம், கும்பாலங்கனம், கலாகர்ஷணம் மூன்றாம் கால பூஜையும் 5000 முறை ஐந்து குண்டங்களில் ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனையும் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாநீதி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10 மணிக்கு முத்து மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
- 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
தேவகோட்டை
தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.
வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
- முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ஆடி 3-ம் செவ்வாயை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொரு ளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- வரலட்சுமி விரத விழாவையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி,:
கோவில்பட்டி கதிரேசன் ரோடில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
- அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.






