search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodai vizha"

    • திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது.
    • விழா நாட்களில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, கும்பாபி ஷேகம், அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, கும்மியடி, வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம், வானவேடிக்கை, கோலப்போட்டி, சேவாபாரதி சார்பில் சுமங்கலி பூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    சிறப்பு நிகழ்ச்சியாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் அனைவருக்கும் பகவத் கீதை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சரவணகுமார், கந்தப்பழம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
    • 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் பக்தி இன்னிசை, புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து அம்மன், மற்றும் பல்வேறுசுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு கிளி வாகனத்தில் ஸ்ரீ சந்தனமாரியம்மன், பவானி அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, கரகாட்டம், மா விளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    நேற்று கொடைவிழா நிறைவுபூஜை, இரவு 8 மணிக்கு நெல்லை கண்ணன் குளுவினரின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி என 5 நாள் கொடை விழா நடந்தது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்து ள்ளனர்.

    • நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி பெருங்கொடை விழாவை யொட்டி கடந்த 29-ந் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை, செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷா பிஷேகம் நடந்தது.

    காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

    நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்த ர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இன்று (செவ்வாய்கிழமை) காலை 9மணிக்கு 108 பால்குடம் பவனி, வில்லிசை பகல் 1 மணிக்கு அலங்கார தீபாரா தனை, அம்மன் வீதியுலா, இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, சந்தன மாரி யம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    நாளை பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியும் நடைபெறும். நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    • விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
    • நாளை 108 பால்குடம் பவனி, இரவில் சுமங்கலி பூஜை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷாபிஷேகம், 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனியும் நடக்கிறது. நாளை காலை 108 பால்குடம் பவனி, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவில் சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, நாளை மறுநாள் பகலில் சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் சப்பர பவனியும், தினமும் வில்லின சுவாமிகள் தெருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    • கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும் நடந்தது.
    • இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது.

    உடன்குடி :

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி அய்யனார் நகர் முத்தா ரம்மன் கோவில் கொடை விழா கடந்த 8-ந் தேதி கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. மதியம் அன்னதானம் நடந்தது.

    கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று காலை செல்லபிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து 108 பால் குடம் ஊர்வலம் தொடங்கி கோவிலை வந்தடைந்ததும், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 10 மணி, இரவு 9 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அம்மன் கும்பம் வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையும், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது. நாளை (12-ந் தேதி) அதிகாலை உணவு பிரி த்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 13-ந் தேதி கிழக்கெத்தியான் சுவாமி கோவில் கொடை விழா நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வாகி கள் சிவராமன் லெட்சு மணன், கணே சன் முரு கன் நாடார், கனகராஜ் சுப்புக்குட்டி, சரவணன், சந்திரசே கரன், செல்வ குமார், முத்து லிங்கம், கணேசன் மற்றும் பாரத மாதா நண்ப ர்கள் அன்ன தானக்குழு நிறுவனர் ஆர்.எஸ்.பாண்டி யன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    • சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.
    • நாளை (4-ந் தேதி) பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை பேரூராட்சி மணல்மேடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஞானக்கரை சுவாமி கோவில் கொடை விழா நேற்று தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    யாகசாலை பூஜை

    நேற்று முன்தினம் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    நேற்று இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அதைதொடர்ந்து ஞானக்கரை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு குடி அழைப்பு பூஜையும், அதை தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சாமக்கொடை

    இன்று மதியம் 12 மணிக்கு மதியக்கொடை நடைெபற்றது. இரவு 9 மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஞானக்கரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு நடைபெறும் சாமக்கொடையில் ஞானக்கரை சுவாமி மற்றும் இதர பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறு கிறது.

    நேர்த்தி கடன்

    அதை தொடர்ந்து மணல்மேடு வீதிகளில் ஊர்வலமாக வலம் வரும் சுவாமியை பொதுமக்கள் தரிசனம் செய்வார்கள். நாளை 4-ந் தேதி பகல் 10 மணிக்கு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி, அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு ஆடல், பாடல், இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு நாளை காலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு களை விழா கமிட்டியினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடை யற்காடு கிராமத்தில் முத்தா ரம்மன் கோவில் கொடைவிழா நேற்று மாலை 6 மணிக்கு திரு விளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    திருவிளக்கு பூஜை

    கொடை விழாவை முன்னிட்டு 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை கோவை தொழிலதிபர் அஜித்ராஜ், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் கோவை மேற்கு மாவட்ட நாடார் சங்க செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    கொடைவிழா

    நாளை (செவ்வாய்க் கிழமை )கொடை விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு புனித தீர்த்தம் எடுக்க செல்லுதல், 10 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபுர கலச பூஜை, கோபுர அபிஷேகம், அம்மனுக்கு கலக அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பகல் 1மணிக்கு மதிய பூஜை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கரகாட்டம், வில்லிசை நிகழ்ச்சியும், செண்டை மேளம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    இரவு 12மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 2.30 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உற்சவர் முத்தாரம்மன் வான வேடிக்கையுடன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபடு வார்கள். அன்று காலை, மாலை, இரவு 3 வேளையும் , வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை )மதியம் 12மணிக்கு மதிய கொடையும், இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • விழாவை முன்னிட்டு தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம்- மயிலப்பபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 5-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் பால்குட ஊர்வலமும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மியடித்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கிடா வெட்டும் நிகழ்வும், மஞ்சள் பானையில் நீராடும் நிகழ்ச்சி நடை பெற்றது. விழா விற்கான ஏற்பாடு களை மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த விழாக் கமிட்டியினர் செய்தி ருந்தனர்.

    • நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது.
    • இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகி யோர் தனித்தனி சன்னதி களில் அமர்ந்து அருள்பா லித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வரு கின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்க ளுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடை பெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடை பெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலா சென்று பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

    இன்று மதியம் பொங்க லிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏரா ளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • நாராயணன் தனது உறவினர் சுடருடன் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார்.
    • ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் நாராயணன் (வயது25). இவர் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரெங்கராஜ புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதற்காக நாராயணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நாராயணன் தனது உறவினர் சுடருடன் கோவில் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லெட்சுமணன் மகன்கள் ஸ்ரீராமன், ஹரிராம், ராமசுந்தரம் மகன் குமார் ஆகியோருக்கும், நாராயண னுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஸ்ரீராமன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
    • 5-ந் தேதி காலை தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. 31 -ந் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் பக்தர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு பூஜையும், அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜைகளும், திங்கட்கிழமை அம்மனுக்கு மாகாப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனிதநீர் எடுத்து வருதல், நையாண்டி மேளத்துடன் வாடிப்பட்டி பழனிசாமி தம்பா மேலத்துடன் செண்டா மேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையம் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு வில்லிசை, கரகாட்டமும், ராஜா ராணி ஆட்டமும தொடர்ந்து நேமிசம் முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்கு பின்னர் இரவு 12.5 மணிக்கு 4 வகையான மேள தாளங்களுடன் வானத்தில் வர்ணஜாலம் காட்டும் கண்கவர் வானவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், 11 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை, பகல் 12 மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

    விழாவை முன்னிட்டு தினசரி சிற்றுண்டி தொடர்ந்து 8 நாட்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் விழாக்குழு வினர் செய்திருந்தனர்.

    விழாவில் தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதாதள மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், நாடார் சமுதாய குழு தலைவர் தங்ககுட்டி நாடார், அருணாச்சல பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் பிரிவு அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் செல்வகுமார், காண்ட்ராக்டர்ஸ் அழகேசன், பொன்மாடசாமி பிரதர்ஸ், ஜெயபாண்டியன் நாடார், விஜயா மெடிக்கல் செந்தில்குமார், காந்திநகர் பாஸ்கர் ஜெயராஜ் நாடார், ஜெயக்குமார், முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனியதங்கம் நாடார், முள்ளக்காடு ஊராட்சிமன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி விளையாட்டுப் பிரிவு தலைவர் ஏ.வி.பிரபாகர், தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின், உப்பு உற்பத்தியாளர்கள் அழகேசன் நாடார், தங்கராஜ் நாடார், ஞானவேலன், முகேஷ் சண்முகவேல், பொன்ராம், பத்மநாதன், கணேசன், முருகேசன், லட்சுமணன் ராஜா சால்ட், குருத்து டிரேடர்ஸ் மற்றும் எல்.ஆர். பாண்டியன் ஸ்போட்ஸ் அகாடமி நிறுவனர் எல்.ஆர். சிவாகர், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முல்லை லதா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் முத்துராஜா, முத்துக்குமார், கேபிள் காண்டிராக்டர் பொன்ராஜ், முத்துவிஜய், பி.பி.ஜி. சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் ஈசாக், பாவா ஹோட்டல் செல்வகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி சில்வர் சிவா, காந்திநகர் முருகேசன் நாடார், சுந்தரம், சுப்பிரமணியன், நடராஜன். கோவை பொன்பாண்டியன் மற்றும் பக்தர்கள் உட்பட கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    ×