என் மலர்
வழிபாடு

செங்கோட்டை அருகே தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா
- தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல இந்தாண்டு கொடை விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 10-ம் திருநாளன்று தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாலையில் பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டாற்று பாலம் அருகே, விரதம் இருந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிலர் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்கிட, பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தார். பறவை காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்து தீப்பாச்சி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






