என் மலர்
புதுச்சேரி

குருவிநத்தம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
பாகூரை அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை செடல் உற்சவம், காவடி பூஜை, மாட்டு செடல், சவப்பாடைசெடல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் பாகூர், குருவிநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்கா வலர் குழு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.






