search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    • முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, கூழ் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×