ஸ்ரீ மருத மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம்
பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம் நடந்த காட்சி.
பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம் நடந்த காட்சி.
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருத மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருது மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திரு விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதை தொடர்ந்து பிஸ்கட் பாக்கெட் அலங்காரத்தில் செய்யப்பட்ட அம்மன் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரை பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு தேரை இழுத்தனர்.

மேலும் பக்தர்கள் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் வேல் போட்டுக்கொண்டு டிராக்டர் உரல் இழுத்துச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்த திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மருத மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com