search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annadanam"

    • மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் தை கார்த்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    தைகிருத்திகை பெருவிழா செங்கல்பட்டு மாவட் டம், திருப்போரூர், கந்த சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நாளை மாலை முதல் 20-ந் தேதி இரவு வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படுவதோடு தைகிருத்திகை தினமான வருகிற 20-ந் தேதியன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்கள் சார்பில் மார்ச் 8-ந் தேதி அன்று மகா சிவராத்திரி பெருவிழாவினை விமரிசையாகவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்திட வேண்டும்.

    அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்க உள்ளது.

    இந்தாண்டிற்கான ராமேசுவரம் காசி ஆன்மிக பயணத்தில் 300 பக்தர்கள் 5 கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    முதற்கட்ட பயணம் பிப்ரவரி 1-ந் தேதி புறப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள், காசியில் பக்தர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்களுக்கு உதவியாக செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர் குழு, மருத்துவக் குழு நியமனம் செய்து பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையிலும், பக்தர்களுக்கு பயனுள்ள வகையிலும் அமைந்திட துறை அலுவலர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருக்கோஷ்டியூரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பசும் பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு சுதந்திர போராட்ட தியாகி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா நாட்டார்கள், சமுதாய தலைவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் முன்னி லையில் தலைவர் கரு.சுப்பி ரமணியன் தேவரின் திருவு ருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருக்கோஷ்டியூர் நாட்டார் கள், சமுதாய தலைவர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இவ்வி ழாவில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் நல அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஆயி ரக்கணக்கானோருக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. வழங்கினார்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர், பெருமாள்பட்டி பகுதியில் நல்லதங்காள், பெரியையன், சின்னையன் சுவாமி கோவில் உள்ளது. இங்க 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. வான வேடிக்கை முழங்க தேங்காய், பழக்கூடை தட்டு, வண்ண மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா சார்பில் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • முதுகுளத்தூர், மானாமதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா, மணி, செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. கோவில் முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடமிட்டு கோலாட்டம் ஆடினார்கள். ஸ்வாமி வேடத்தில் வந்த குழந்தைகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சாஸ்தாநகர், அழகர் கோவில் தெரு, ெரயில்வே காலணி மற்றும் கொன்னக்குளம், வேதியேரேந்தல், செய்களத்தூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    • கமுதி அருகே தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.
    • கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோவில் கடைசி ஆடித்திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பெருநாழி போஸ், சிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். தென் மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் குண்டுகுளம் அணியினர் முதல்பரிசும், 2-ம் பரிசை விஜய பாண்டியன் நினைவு கிளப் அணியும், பாளையம் பட்டி அணி 3-வது பரிசும், புதுக்கோட்டை அணி 4-வது பரிசும், சாமிபட்டி 5-வது பரிசும், கோவிலாங்குளம் அணி 6-வது பரிசும், கள்ளக்காரி 7-வது பரிசும், அரியமங்களம் 8-வது பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஏற்பாடு செய்தனர்.

    முன்னதாக சிவகாளியம்மன் கோவிலுக்கு பால்குடம், அக்னி சட்டி, எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர். அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
    • சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்

    மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.

    பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா

    மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    திருக்கல்யாணம்

    பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.

    தங்க கோபுரம்

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை

    விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.

    சிறப்பு

    மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.

    இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.

    பக்தர்களின் பிரார்த்தனை

    திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.

    புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.

    • துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.
    • அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    அமாவாசை என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாசையாகும்.

    சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை.

    இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

    துவிதியை திதி

    துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாட்களில் இரண்டாவது நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    துவிதியை எனும் வடமொழிச் சொல் இரண்டாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் இரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் துவிதியையை சுக்கில பட்ச துவிதியை என்றும், பூரணையை அடுத்த துவிதியையை கிருட்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கின்றனர்.

    • சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும்.
    • தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.

    அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.

    சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    • முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.
    • அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர்.

    சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசை அன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

    அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்கு காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும். உடல் நலம்பெறும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

    அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது.

    இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு "இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை' என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது, தொடக்கூடாது.

    ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகம் இருக்கும்.

    எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.

    அரச மரத்தை ஞாயிறு அன்று வலம் வந்தால் நோய் அகலும், திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும், செவ்வாய்- தோஷங்கள் விலகும், புதன்- வியாபாரம் பெருகும், வியாழன்- கல்வி வளரும். வெள்ளி- சகல சௌபாக்கியங் களும் கிட்டும்.

    சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை யும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

    "மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி

    அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:'

    இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும்.

    இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.

    குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பை கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.

    அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

    • முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
    • துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

    புண்ணிய நதியில் நீராடல்

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.

    அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

    சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெற முடியும்.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதா நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும் ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.

    பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால் வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது, அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

    இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.

    சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு செல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனித வாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது, இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.

    கொடிய பாவங்கள் நீங்கும்

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.

    அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நாமதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

    இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.

    பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையாளம்.

    • திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் சென்னையில் 6 இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காட்டுப்பாக்கம், போரூர், திருமழிசை, மாங்காடு ஆகிய இடங்களில் அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் தலைமையில், பொதுச்செயலாளர் வைரவன் முன்னிலையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருமழிசையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காட்டுப்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. மாங்காட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பூந்தமல்லி வட்டார நாடார் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எல்.லட்சுமணன் தலைமையில், அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவன தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன் முன்னிலையில் பூந்தமல்லியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய நாடார் மகாஜன சபை பொருளாளர் ஜெயராமன், தலைமை நிலைய செயலாளர் வி.பி.விஜய், காப்பாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பி.துரை, மாநில செயலாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், வேல் குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ராஜகனி, மாநில இளைஞர் அணி தலைவர் மைக்கேல்ராஜ், மாநில இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ் பாண்டியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அபி, மாநில கலை பிரிவு செயலா ளர் பிரகாஷ், சென்னை மண்டல செயலாளர் கமலஹாசன், கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, மாநில உதவிக் குழு செயலாளர் ஆனந்தபாலன், மாநில தற்காப்பு பிரிவு செயலாளர் சரவணன், தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சேவியர், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விக்கி, காட்டுப்பாக்கம் பகுதி செயலாளர் சுந்தரகுமார், கவுரவ ஆலோசகர்கள் காந்தி மனகரன், அய்யா துரை, மதுரவாயல் தொகுதி தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த வாரம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் பூசாரி கல்யாணி குடும்பத்தார் சார்பில் நடந்த அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு தொடங்கி வைத்தார். அன்னதானத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ், சக்தி, ஜெகதீஸ்வரன், செந்தில்குமார், சரத்குமார் மற்றும் திருப்பணிக்குழு, உற்சவ கமிட்டியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×