search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூரில் திருவிளக்கு பூஜை
    X

    மேலூரில் திருவிளக்கு பூஜை

    • மேலூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

    மேலூர்

    மேலூர் காந்திஜி பூங்கா அருகில் உள்ள பாலமுருகன் கோவிலின் 38-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் வழங்கினர். இன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினரும், செயலாளர் மலைச்சாமி, நிர்வாக கமிட்டியாளர்கள் தயாநிதி சிங்காரம், கார்மேகம், சீத்தாராமன், மணி, ஹரிகிருஷ்ணன், மோகன், ராமச்சந்திரன், வைராத்தாள் ஆகியோரும் செய்திருந்தனர்.

    Next Story
    ×