search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானம்

    • ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
    • ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற அபினேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நகர (வடக்கு) செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், நகர (தெற்கு) செயலாளர் பரமசிவம், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என். பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ரதத்துடன் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக ஜவகர் மைதானத்தை சென்றடைந்தது.அங்கு அம்மா உணவகம் அருகில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வி.எஸ்.ராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, வனராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வள்ளியம்மாள், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×