என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darpanam"

    • தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கரையில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    • வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.



    மதுரை வைகை ஆறு அருகில் இன்று திரளானோர் தர்ப்பணம் செய்தனர்.

     மதுரை

    தமிழகத்தில் இந்துக்கள் முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து காகத்திற்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசை அன்று வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, படையல் உணவுகள், தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே தை அமாவாசை அன்று நீர்நிலைகளில், முன்னோருக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசிகளை வழங்குவர் என்பது ஐதீகமாகும். மறைந்த முன்னோருக்கு சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி கோவில்களுக்கு சென்று வழிபட்டால் இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையும், குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. யானைக்கல் தரைப்பாலம், திருமலைராயர் படித்துறை, பேச்சியம்மன் படித்துறை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி அதிகாலை முதல் தொடங்கியது.

    இதற்காக அந்தந்த பகுதிகளில் புரோகிதர்கள் தயாராக இருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றின் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பட்டது. அதன்பிறகு வாழை இலையில் தீபம் ஏற்றி புரோகிதர்கள் வழிபாடு நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்தனர்.

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது
    • பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.

    திருப்பூர்:

    மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாதம் தொடங்கியது.இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட உள்ளது.

    சேவூர் அழகு நாச்சியம்மன் என்ற பத்ரகாளியம்மன் மற்றும் காமராஜ் நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில்களில் த்திருவிழா இன்று தொடங்கியது. மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு திரவியஅபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து வாரந்தோறும் உபயதாரர்களால் கூழ் ஊற்றுதல் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இன்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு, கிருத்திகை, பவுர்ணமி, பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 11-ந்தேதி) காலை 10 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சிறப்பு பஸ் இயக்க முடிவு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று மாத முதல் அமாவாசையையொட்டி தாராபுரம் அமராவதி ஆறு மற்றும் உடுமலையில் நீர்நிலைகளில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
    • மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.

    கடலூர்:

    இறந்த மூதாதையர்க ளுக்கு தர்ப்பணம் செய்வ தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தா லும், மாதம்தோறும் அமாவாசை யிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும். தர்ப்பணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்க ளுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

    இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம் . இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று ம் (திங்கட்கிழமை), வருகிற ஆகஸ்ட் மாதம் 16 -ந் தேதியும் அமாவாசை திதி வந்துள்ளது. இன்று வரக்கூடிய அமாவாசை திதியானது சூனிய திதியாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரக்கூடிய அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்து வைரலாகி வந்தது.

    இன்று காலைகடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மிக குறைந்த அளவில் பொது மக்கள் நேரில் வந்தனர். பின்னர் கடலில் நீராடி சூரியனை வணங்கி தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். ஆனால் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, கடலூர் தென்பெண்ணை ஆறு நதிக்கரையில் தங்கள் மூதா தையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி செல்வார்கள். இதன் காரணமாக மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். ஆனால் இன்று வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது.

    • முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
    • தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.

    தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது. காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

    ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம் எனவே பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

    அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.

    தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

    எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.

    முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அன்று இருட்டாக இருந்தாலும் கூட அது நல்லநாளாகவே கருதப் படுகிறது.

    • முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.
    • அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர்.

    சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசை அன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

    அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்கு காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும். உடல் நலம்பெறும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

    அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது.

    இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு "இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை' என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது, தொடக்கூடாது.

    ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகம் இருக்கும்.

    எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.

    அரச மரத்தை ஞாயிறு அன்று வலம் வந்தால் நோய் அகலும், திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும், செவ்வாய்- தோஷங்கள் விலகும், புதன்- வியாபாரம் பெருகும், வியாழன்- கல்வி வளரும். வெள்ளி- சகல சௌபாக்கியங் களும் கிட்டும்.

    சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை யும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

    "மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி

    அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:'

    இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும்.

    இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.

    குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பை கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.

    அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

    • சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும்.
    • தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை சிறப்பு.

    அமாவாசை தினம் இந்துக்களுக்கு புனிதமான தினமாகும். அதுவும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை பித்ரு கடன் செய்ய ஏற்ற நாளாகும். அன்றைய தினம் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம்.

    சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்னும், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    இதனால் தோஷங்களில் இருந்து தப்ப முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    ஆடி அமாவாசை தினத்தன்று எள்ளும் அரிசியும் கலந்து மூத்தோர்களை வணங்கும் இந்துக்கள் அவற்றை கடலில் இட்டு நீராடி விட்டு பின்னர் முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக 24 தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    • துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.
    • அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    அமாவாசை என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாசையாகும்.

    சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை.

    இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

    துவிதியை திதி

    துவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாட்களில் இரண்டாவது நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.

    துவிதியை எனும் வடமொழிச் சொல் இரண்டாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் இரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் துவிதியையை சுக்கில பட்ச துவிதியை என்றும், பூரணையை அடுத்த துவிதியையை கிருட்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கின்றனர்.

    • சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள்.
    • புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம். வியாழன் - ஞானம் கூடும்.

    சந்திர பகவானை மாத்ருகாரன் (தாயை நிர்ணயிப்பவர்) என்பார்கள். சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி தினம், தாயாரை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளாக கூறப்படுகிறது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்குரிய வழிபாடுகளை செய்வதைப்போல தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து விரதம் இருந்து வழிபாடுகளை செய்ய வேண்டும். எவன் ஒருவன் பெற்ற தாயை நினைத்து, அவள் பாசத்தை நினைத்து மனதாரப் போற்றி நாளை வழிபாடு செய்கிறானோ, நிச்சயமாக அவன் குலம் எவ்வித குறையுமின்றி தழைக்கும்.

    சித்ரகுப்தரை கும்பிடுங்கள்

    நாம் செய்யும் பாவ, புண்ணியங்களை இம்மி பிசகாமல் கணக்கு எழுதுபவர் சித்ரகுப்தர். இவர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான் அவதரித்தார். இவரது திருமணமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சித்ரகுப்தரை நாளை நாம் மனப்பூர்வமாக வழிபடுவது நல்லது. நாளை யார் அவரை வழிபடுகிறார்களோ, அவர்களது பாவ சுமை ஏறாமல் சித்ரகுப்தர் பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கையாகும்.

    நாளை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள், மறக்காமல் ஆலயத்துக்குள் இருக்கும் சித்ரகுப்தரை வழிபடலாம். அப்போது, `நான் மலை அளவு செய்த பாவத்தை கடுகு அளவுக்கும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலை அளவுக்கும் கணக்கில் எழுதிக் கொள்' என்று கூறி வழிபட வேண்டும்.

    திருமணம் கை கூடும்

    பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பலன்கள்

    ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

    திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

    செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

    புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

    வியாழன் - ஞானம் கூடும்.

    வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

    சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

    நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

    • புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம்.
    • அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புனித தீர்த்தங்களான காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடு துறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக் கட்டம், பவானி முக்கூடல், பாப நாசம், சொரி முத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.

    நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ் கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

    ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.

    பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள்.

    ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகே தான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    லவகுச குளத்தில் நீராடுங்கள்

    கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்து வந்த போது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார்.

    அவரின் திருவருளால் லவகுசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம். ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும், மன சஞ்சலம் நீங்கும், பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும்.

    ஆடி அமாவாசை நாளில், குசலவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

    21 பிண்டங்கள்

    பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக செய்யப்படும் வழிபாட்டை சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

    • அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்
    • முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

    அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கி செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

    அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்வது வழக்கமாகும்.

    காகத்திற்கு உணவிடுங்கள்

    அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.

    அமாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..

    திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.

    இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.

    பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

    பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும். அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    • அமாவாசையில் ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது.
    • கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள்.

    அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

    அமாவாசையில் ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகின்றது.

    ஆடி, அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

    காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.

    யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்' செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

    கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.

    அந்த பெண் இந்த புடவையை பயன்படுத்திக்கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள். மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

    • பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாவிடில் அது பலனை தராது.
    • மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் முறைப்படி செய்ய வேண்டும்.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

    எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்த பண்டங்களாகும்.

    ×