search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தாய்க்கு தர்ப்பணம்
    X

    தாய்க்கு தர்ப்பணம்

    • சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள்.
    • புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம். வியாழன் - ஞானம் கூடும்.

    சந்திர பகவானை மாத்ருகாரன் (தாயை நிர்ணயிப்பவர்) என்பார்கள். சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி தினம், தாயாரை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளாக கூறப்படுகிறது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்குரிய வழிபாடுகளை செய்வதைப்போல தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து விரதம் இருந்து வழிபாடுகளை செய்ய வேண்டும். எவன் ஒருவன் பெற்ற தாயை நினைத்து, அவள் பாசத்தை நினைத்து மனதாரப் போற்றி நாளை வழிபாடு செய்கிறானோ, நிச்சயமாக அவன் குலம் எவ்வித குறையுமின்றி தழைக்கும்.

    சித்ரகுப்தரை கும்பிடுங்கள்

    நாம் செய்யும் பாவ, புண்ணியங்களை இம்மி பிசகாமல் கணக்கு எழுதுபவர் சித்ரகுப்தர். இவர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான் அவதரித்தார். இவரது திருமணமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சித்ரகுப்தரை நாளை நாம் மனப்பூர்வமாக வழிபடுவது நல்லது. நாளை யார் அவரை வழிபடுகிறார்களோ, அவர்களது பாவ சுமை ஏறாமல் சித்ரகுப்தர் பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கையாகும்.

    நாளை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள், மறக்காமல் ஆலயத்துக்குள் இருக்கும் சித்ரகுப்தரை வழிபடலாம். அப்போது, `நான் மலை அளவு செய்த பாவத்தை கடுகு அளவுக்கும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலை அளவுக்கும் கணக்கில் எழுதிக் கொள்' என்று கூறி வழிபட வேண்டும்.

    திருமணம் கை கூடும்

    பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பலன்கள்

    ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

    திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

    செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

    புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

    வியாழன் - ஞானம் கூடும்.

    வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

    சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

    நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

    Next Story
    ×