search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "photo"

    • இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
    • இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

    சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.

    ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

    தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

    இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
    • காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை.

    ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.

    ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

    அதைதொடர்ந்து இந்த விவாகரத்து வதந்திக்கு பதில கூறும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.


    "ஜெயம்" படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த ஆர்த்தி, "காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை" என்ற தலைப்பைச் சேர்த்திருந்தார். இவர்களது உறவு குறித்த இந்த ஒரு பதிவை வெளியிட்டு விவாகரத்து குறித்த செய்தியை ஆர்த்தி சரிசெய்தார்.

    இந்நிலையில் தற்போது ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவை.
    • இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்தின் ராமேசுவரம் அருகில் உள்ள தனுஷ் கோடியில் இருந்து இலங்கையில் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ் கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்கும் 7 முதல் 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை.

    இது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவையாக இருப்பதால் ராமர் பாலம் (ராம் சேது), ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இது ராமர் கட்டிய பாலம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

    இப்பாலத்தின் கிழக்கில் சுமார் 130 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட மன்னார் தீவு உள்ளது. இது, இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலை மற்றும் ரெயில் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் பாலத்தின் மேற்கில் இந்தியப் பகுதியில் ராமேஸ்வரம் தீவு உள்ளது. இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து சாலை மற்றும் கடல் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தனது காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு

    உள்ளது. இங்கு கடல் மிகவும் ஆழமற்றதாக அதாவது 1 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான ஆழத்தில் மட்டுமே இருப்பதால் இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

    இங்குள்ள சுண்ணாம்பு கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

    இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், "இந்த இயற்கை பாலம் 15-ம் நூற்றாண்டு வரை பயணிக்க கூடியதாக இருந்ததாகவும் பின்னர் புயல்களால் படிப்படியாக அது அரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது" என்றும் கூறியுள்ளது. அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராமர் பாலம் தொடங்கும் இடமாக கருதப்படும் அரிச்சல் முனை பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.
    • அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் டுவிங்கிள் கண்ணா. கடந்த 1995-ம் ஆண்டு பர்சாத் என்ற படத்தின் மூலம் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக பாபி தியோல் நடித்திருந்தார். படத்தில் இருவரின் காதல் காட்சிகள் மிகவும் வரவேற்பை பெற்றது.

    இதுபோன்று படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் மூலம் இந்தி திரை உலகில் டுவிங்கிள் கண்ணா பிரபலமாகி ஏராளமான படங்களில் நடித்தார்.

    ஷாருக்கான் சல்மான் கான் அக்சய் குமார் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த டுவிங்கிள் கண்ணா, நடிகர் ராஜேஷ் கண்ணா-டிம்பிள் கபாடியா ஆகியோரின் மகள் ஆவார்.

    சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்த டுவிங்கிள் கண்ணா 2001-ம் ஆண்டு அக்சய் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தனது முதல் கதாநாயகனான பாபி தியோலை டுவிங்கிள் கண்ணா சந்தித்துள்ளார்.

    தற்போது இருவரும் சந்தித்த புகைப்படங்களையும் பர்ஷாத் படத்தில் நடித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் 29 ஆண்டுகளுக்கு பிறகு பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி. அவர் இப்போதும் படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    பாபி தியோல் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    சர்வதேச அளவில் வெளியான இந்த படம் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பேட்டை படத்தில் மூலம் மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானார்.
    • அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார்.

    இதன் மூலம் பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

    அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர் ஒருவர் உங்கள் அழகு சூரியனை விட பிரகாசமாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • புகைப்படங்களை ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண படங்களை உருவாக்கி இருக்கின்றனர்.
    • சிபின் லூகோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது

    திருவனந்தபுரம்:

    செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) என்பது வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களில் ஒன்றாகும். மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு படைப்பாக்க திறன்.

    இந்த படைப்பாக்க திறன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலமாக சாத்தியப்படுமென்றால் அதுவே செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில் நுட்பம்) என்று அழைக்கப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் மூலமாக பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கின்றன.

    ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயார் செய்து சமூக வலை தளங்களில் பதிவிடும் செயல்கள் சமீபகாலமாக அதிகளவில் நடக்கின்றன. சில புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பார்க்க ரசிப்பது போன்று இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சனையாகி விடுகிறது.

    கேரள மாநிலத்தில் ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண்களின் நிர்வாண படங்களை 3 வாலிபர்கள உருவாக்கியுள்ளனர். அவ்வாறு உருவாக்கிய நிர்வாண படங்களை இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு நண்பர்களை பார்க்க வைத்துள்ளனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் காசர் கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிபின் லூகோஸ்(வயது21), ஐஸ்டின் ஜேக்கப்(21), எபின் டாம் ஜோசப்(18). நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி தங்களின் கிராமத்தை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் எடுத்திருக்கின்றனர்.

    குறிப்பாக கிராம பெண்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வரும்போதும், அங்குள்ள மலையில் பெண்கள் ஊர்வலமாக செல்லும்போதும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

    பின்பு அவர்களின் புகைப்படங்களை ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண படங்களை உருவாக்கி இருக்கின்றனர். அவ்வாறு உருவாக்கிய நிர்வாண படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    அந்த நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ள அவர்களது உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும். இதனால் அந்த படங்களை வாலிபர்களின் நண்பர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபின் லூகோசின் வீட்டுக்கு அவரது கிராமத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார்.

    அப்போது சிபினின் செல்போனை அவர் பார்த்திருக்கிறார். அதில் ஏராளமான இளம் பெண்களின் நிர்வாண படங்கள் இருந்ததை பார்த்தார். மேலும் அவரது உறவுக்கார பெண்களின் நிர்வாண படங்களும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவற்றை தனது செல்போன் மற்றும் தனது உறவினர்கள் சிலரது போனுக்கு சிபின் லூகோசினுக்கு தெரியாமல் அனுப்பினார்.

    நிர்வாண படங்கள் குறித்து சிபின் லூகோசிடம் நைசாக கேட்டார். அப்போது ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் நிர்வாண படங்களை நண்பர்கள் இருவடன் சேர்ந்து உருவாக்கியதாக சிபின் லூகோஸ் தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்ட அவர் சிபின் லூகோசை கண்டித்திருக்கிறார்.

    இதையடுத்து சிபின் லூகோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிபின் லூகோஸ், ஐஸ்டின் ஜேக்கப், எபின் டாம் ஜோசப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது ஏராளமான இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தன. இதையடுத்து 3 பேரின் செல்போன்களையும் தடயவியல் பரிசோதனைக்கு சைபர் கிரைம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 3 பேரும் ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது கிராமத்தை சேர்ந்தவர்கள், பள்ளி தோழிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்கியிருப்பது போலீசாரின விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் இளம்பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்கி பார்த்து ரசிக்க மட்டும் செய்தார்களா? அல்லது வேறு யாருக்கும் அனுப்பி விற்பனை செய்தார்களா? என்று விசாரண நடத்தப்பட்டு வருகிறது.

    சொந்த கிராம பெண்கள், உடன் படித்த தோழிகள் உள்ளிட்டவர்களின் நிர்வாண படங்களை வாலிபர்கள் உருவாக்கி பரப்பிய விவகாரம் அவர்களது கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    • பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.

    தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டும், மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படம் சம்பந்தமாக எந்த அப்டேட்டுகளும் சமீப காலமாக  வரவில்லை. இந்நிலையில் சீயான் விக்ரம் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வருகிறது. தலையில் முண்டாசுடன், மூக்குத்தி அணிந்தும் பார்க்கவே படும் பயங்கராமாக இருக்கிறார் விக்ரம். அப்புகைப்படத்திற்கு எக்ஸைட்டிங் டைம்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா.
    • இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

    நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.

    இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
    • பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.

    அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    ×