என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் அன்னதானம்
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த வாரம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில் தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் பூசாரி கல்யாணி குடும்பத்தார் சார்பில் நடந்த அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு தொடங்கி வைத்தார். அன்னதானத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ், சக்தி, ஜெகதீஸ்வரன், செந்தில்குமார், சரத்குமார் மற்றும் திருப்பணிக்குழு, உற்சவ கமிட்டியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






