என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமண்டபம்"

    • மயிலாடுதுறை பகுதி வாழ் மக்கள் நாகப்படையாட்சியாரின் புகழினை பரப்ப துவங்கினர்.
    • மிதவை பேருந்துகளுக்கு நாகப்படையாட்சியாரின் பெயரினை சூட்டி இருந்தனர்

    மயிலாடுதுறையில் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரக போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவ சிலை அமைத்து அவரை கௌரவ படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மயிலாடுதுறையில் தென் ஆப்பிரிக்கா சத்தியாகிரக போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவ சிலை அமைத்து அவரை கௌரவ படுத்த வேண்டும்.

    மகாத்மா காந்தி அடிகள் அவர்கள் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் ஒரு வழக்கறிஞராக அங்கு இருந்தாலும், தென்னாப்பிரிக்காவில் இனவெறி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதன் மூலம் ஒரு தலைவராக உருவெடுத்தார். அந்த காலகட்டத்தில் தான் சத்தியாகிரகம் என்ற அவரது போராட்ட முறை உருவானது. 1893-ஆம் ஆண்டில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, வழக்கறிஞர் வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு குடியேறிய இந்தியர்கள் மற்றும் கருப்பின மக்கள் மீதான பாகுபாடுகளைக் கண்டு, அதற்கு எதிராகப் போராடத் தொடங்கினார். தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் மற்றும் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராட, காந்தி "சத்தியாகிரகம்" என்ற அகிம்சை வழியைப் பின்பற்றினார். இது ஒரு புதிய போராட்ட முறையாக இருந்தது.

    காந்தி, தென்னாப்பிரிக்காவில் பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக பீனிக்ஸ் என்ற இடத்தில் குடியேற்றத்தை உருவாக்கி, அங்கிருந்து தனது போராட்டங்களை வழிநடத்தினார். அந்தப் போராட்ட காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாக இந்தியர்கள் பலர் களம் இறங்கினர். அவர்களில் மிக முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சார்ந்த மயிலாடுதுறை அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுவாமி நாகப்ப படையாட்சி என்பவராவார். நாகப்ப படையாட்சி காந்தி அவர்களுடன் சேர்ந்து சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது காவல்துறையின் தடியடி பிரயோகத்தில் காந்தியடிகள் மீது அடி விழாமல் அவர் மீது விழுந்து அனைத்து அடிகளையும் வாங்கியவர் சாமி நாகப்ப படையாட்சியார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அவருக்கு வயது 18 தான். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் நாகப்பன் படையாட்சி குளிர் பிரதேசம் பகுதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    சிறைச்சாலையில் அவருக்கு நிமோனா காய்ச்சல் ஏற்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த ஒரு வார காலகட்டத்தில் உயிரிழந்தார். அவருடைய இறப்பிற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என அதற்கென்று தென்னாப்பிரிக்காவில் பெரியதோர் கிளர்ச்சி எழுந்தது. அப்பொழுது போராட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இந்தியா திரும்பிய காந்தியடிகள் அவர்கள் முதன் முதலாக சந்திக்க விரும்பிய குடும்பம் நாகப்ப படையாட்சி குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்வாரே அவர் மயிலாடுதுறை வந்து நாகப்ப படையாட்சியாரின் குடும்பத்தை சந்திக்க முற்பட்ட பொழுதும் அவரது வாரிசு தாரர்கள் இருந்தும் அவர்களை காந்தியடிகளிடம் அடையாளம் காட்டிட கூடாது என்ற தீய நோக்கத்தில் நாகப்ப படையாட்சியாரின் வாரிசுதாரர்கள் யாரும் தற்போது இல்லை என காரணம் காட்டி காந்தியடிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

    ஆனால் பிற்காலத்தில் மயிலாடுதுறை பகுதி வாழ் மக்கள் நாகப்படையாட்சியாரின் சத்தியா கிரக போராட்டத்தை மனதில் நிறுத்தி அவர்களின் புகழினை பரப்ப துவங்கினர். பிறகு 1972 வாக்கில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் நோக்கில் மிதவை பேருந்துகளுக்கு அவரது பெயரினை சூட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நானும் 1980-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு ஏற்படுகின்ற பொழுதெல்லாம் சாமி நாகப்படையாட்சியார் அவர்களுக்கு உருவ சிலையும், மணிமண்டபமும் கட்டி அவர் பெயர் காலம் உள்ளவரை நிலைத்திருக்க அவரை கௌரவப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தேன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு விரைவாக மயிலாடுதுறை நகரின் முக்கிய சந்திப்பு பகுதியில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

    இந்த நிகழ்வுதனை தொடர்ந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன் அவர்களுக்கும் அதனை முதல்வரின் கவனத்திற்கு விரைவாக கொண்டு சேர்த்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும் எனது பாராட்டுதனை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் முதல் சத்தியா கிரக போராட்டத்தில் உயிர் நீத்த நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் மூன்று தலை நகரங்களில் அடங்கியுள்ள மிகப்பெரிய நகரமான ஜோகானஸ்பர்க் பகுதியில் சாமி நாகப்ப படையாட்சி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    எனவே இவைகளை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவ சிலை அமைத்தால் இன்னும் அவருக்குப் பெருமை சேர்த்ததாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலை அமைப்பு தனை நடத்திட இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்மாத இறுதிக்குள் தானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண் டுமென்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக் கப்பட்டு அதற்கான வேலைகளும் முடிக்கக் கூடிய நிலையில், தனி நபரால் வழக்கு தொட ரப்பட்டு அந்த இடம் இந்து சமய மற்றும் அறநிலைய துறைக்கு சொந்த மானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த இடத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் ஆய்வு செய்து அந்த இடம் அரசுக்கு சொந்தமென்று மணி மண்டபத்திற்கு ஒதுக்கினார்கள். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் அறநிலையத்து றைக்கு சொந்தமென தீர்ப்பு வந்திருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் என்னுடைய கிராமத்தில் ஆய்வு செய்ய வந்த போது மணி மண்டபத்தையும் ஆய்வு செய்தார். அங்குள்ள திருமண மண்டபத்தையும் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது திருமண மண்டபத்திற்கான வாடகை ரூ.15 ஆயிரம் என நிர்ண யிக்கப்பட்டது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த இடம் இப்போது அரசுக்கு சொந்தம். அறநிலையத்து றைக்கு சொந்த மானது என தீர்ப்பு வந்திருக்கிறது. எனவே அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கிற்கு அப்பீல் செய்ய வேண்டும். அறநி லையத்துறையோடு ஆலோசித்து அந்த இடத்தி லேயே மணிமண்டபம் பணி களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குமரி மாவட்டத்தில் துறையின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிற போது அந்த பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. முதல்-அமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சொல்லியிருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு இருக்குமானால் அந்த பிரச்சினையை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள், நானும் அந்த இடத்தை ஆய்வு செய்ய இருக்கிறேன் என்றார்.

    • சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கலெக்டர் தலைமையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக சட் டசபை கூட்டத் தொடரில் நேற்று கேள்வி நேரத்தின் போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது.-

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தோவாளையில் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, அந்த பணி முடியும் தருவாயில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. செய்தித்துறை அமைச்சர் நேரடியாக வந்து விசாரித்து அந்த இடம் இந்து அறநிலையத்து றைக்கு சொந்தமான இட மாக இருப்பதால், அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்படும் என்று கூறினார்கள். எனவே, மீண்டும் அந்த பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்குபதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடந்த கூட்டத் தொடரிலையே சட்டசபையில் இது குறித்து எடுத்து சொன்னார். தேர்தலுக்கு முன்பாகவே, அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து மாவட்ட கலெக்டரோடு நானும் (அமைச்சர் சாமிநாதன்) தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்று விட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் இப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்தப்பணி நிச்சயமாக தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.

    மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.

    இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.20 லட்சத்தில் மகன்கள் கட்டினர்
    • 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 70).

    இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகழ்கள் உள்ளனர். நீலகண்டன் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார்.

    பெண் கல்வியை ஊக்குவித்து பல பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அப்பகுதி மக்களிடையே பேரன்பை பெற்றிருந்தார்.

    மேலும் தனது 3 மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து இன்று வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

    இந்நிலையில் நீலகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினர் பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். மேலும் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

    இதுகுறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-

    எங்களுடைய தந்தை எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார். அப்பா செய்ததில் நாங்கள் சிறிது கூட அவருக்காக எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அப்பா அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என அவ்வபோது கூறி வருவார்.

    அதன் காரணமாக அவருடைய நினைவு நாளில் தங்களால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

    • தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • செய்தி துறை செயலாளர் தகவல்
    • மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மண்டப உள் அரங்கினை ஆரோக்கியமான பயன்பாடுகளுக்கு கொண்டுவர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து, பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்ட பத்தினை ஆய்வு மேற் கொண்டு மண்டபத்தில் பழுத டைந்துள்ள பகுதிகள் புதிதாக சீரமைக்கப்பட்டதை பார்வையிட்டு, மண்டபத்தில் உள்புறம் பொதுவுடமை வீரர் ப.ஜீவா னந்தத்தின் அரியவகை புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்திட அறிவுறுத்தினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபத்தினை ஆய்வு மேற்கொண்டு, மண்டபத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதை சீரமைத்திட பொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும், தோவாளை பகுதியில் ரூ.92.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் விரைவில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

    ஆய்வுகளில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின் பிரபு, வட்டாட்சி யர்கள் ராஜேஷ், வினை தீர்த்தான், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.
    • தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்க போராடிய விவசாயிகள் மீது அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகள் மீதான திமுக.,வினா் பாா்வை தற்போது வரையில் மாறவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.

    பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் இங்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்பட வேண்டும்.பிரதமா் மோடி அரசாங்கம் இலவச மின்சாரத்துக்கும், விவசாயிகளுக்கும் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதை பாஜக., ஆதரிக்கும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை பிரதமா் மோடியையே சாரும் என்றாா்.இதைத் தொடா்ந்து, தியாகிகள் நினைவிடத்தில் ஒலிபெருக்கி வைக்க காவல் துறையினா் அனுமதி வழங்காததைக் கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

    • கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாள் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். சரவணன் தலைமையில் தியாகராய நகரில் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி ம.பொ.சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் டாக்டர் கே.வி.எஸ்.சரவணன் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரரும் தமிழறிஞருமான சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பனைத்தொழில் பாதிப்படையும் வகையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம்.பி.மணி, அன்பழகன், உதயா, ஜெயசங்கர், உதய சங்கர், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
    • வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.

    அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு எஸ்.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

    தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியனுடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். ஷெரீப் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது எஸ்.ஆர். பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில்:-

    தேவேந்திரகுல வேளா ளர் மக்களின் நீண்ட கோரிக் கையான தியாகி இமானு வேல் சேகரனார் அவர் களுக்கு தமிழக அரசு சார் பில் 3 கோடி செலவில் முழுஉருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக் கப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலை வர் அருண்குமார், மாநில பொருளாளர் முருகேச பாண்டியன் தெற்கு மண்டல செயலாளர் மங்கள ராஜ், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்டதுரை பழனி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மருத குமார், சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனிவேல் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாழ மணி பாண்டியன், தென் காசி மாவட்ட செயலாளர் யோகராஜ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரவின் ராஜ், நெல்லை மாவட்ட செயலா ளர் ராஜேஸ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலா ளர் கருப்பசாமி பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

    ×