search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimandapam"

    • மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
    • நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

    அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
    • வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.

    அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.

    இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு அரசின் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியாதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகர தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376 சதுர அடி பரப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என்றார்.

    இதில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல் ராஜ், சுரேஷ் குமார், மாநகர தொண்டர் அமைப்பாளர் முருக இசக்கி, வட்ட செயலாளர்கள் ரவிந்திரன், கீதா மாரியப்பன், கந்தன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்ஹில்ட், பரதர் நலசங்க தலைவர் ரொனால்ட் வில்லவராயர், சமூக ஆர்வலர் பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கல்வெட்டு செங்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அதனை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் காமராஜர் பேத்தி காமராஜ்கமலிகா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராம் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி வேலுசாமி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
    • நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.

    நாகப்பட்டினம்:

    தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான் நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    • நூற்றாண்டு விழா 4 நாட்கள் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து முதல் நாளான நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ராஜா ராஜகோபால தொண்டைமானின் சிலைக்கு, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின் அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

    மன்னர் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். கருணாநிதி புதுக்கோட்டையை 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொக்கைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

    அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

    புதுக்கோட்டை நகரில் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைப்படும் என்று அறிவித்துள்ள முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் விரைவில் அமைக்கப்படும் .

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.
    • ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் வளாகத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.

    இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் மோகன்தாஸ், முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடந்தது. சென்னையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    படிக்காத பாமரர்களுக்கும் ‘தந்தி’ பத்திரிகை மூலம் தமிழ் கற்று கொடுத்து படிக்க வைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மைந்தர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் தொண்டாற்றினார். மேலும் அவர் கல்வி, விளையாட்டு, ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக திறம்பட பணியாற்றினார். அவர் எண்ணற்ற கோவில்களில் திருப்பணிகளை நடத்தினார். அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.



    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியவுடன் மழைக்காலம் தொடங்கியது. திருச்செந்தூர் கடலோரத்தில் இருப்பதால் நிலத்தடி நீர் கசிவு இருந்தது. எனவே தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 2 மாதங்களில் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவு பெறும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார்.



    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

    இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்குகிறார்.

    இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa


    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #SivanthiAditanar
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாதிரி வரைபடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த விழாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதையொட்டி கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மணிமண்டபம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற 10-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதி சங்கர், தூத்துக்குடி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) சுகுமார், இளநிலை பொறியாளர் கணேசன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SivanthiAditanar
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.1.34 கோடி அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SivanthiAditanar
    சென்னை:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறையின் செயலாளர் இரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்- அமைச்சர், “திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பதற்காக உரிய இடத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான வரைபடத்துடன் கூடிய 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டை மாவட்ட கலெக் டரின் மேலொப்பத்துடன் அனுப்புமாறும், முதல்- அமைச்சரின் ஒப்புதல் பெற ஏதுவாக, 5 மாதிரி வரைபடங்களையும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளரிடம் (கட்டிடங்கள்) கேட்கப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணம் 0.93.0 ஏர்ஸ் நிலத்தில், 60 செண்ட் நிலத்தை தேர்வு செய்து அந்த இடத்துக் கான புலத்தணிக்கை அறிக்கையை 24.3.2018 அன்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பிவைத்தார்.

    பொதுப்பணித்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் மொத்த பரப்பு 342.22 சதுர மீட்டரில் (78.41 சதுரமீட்டரில் மணிமண்டபம், 263.81 சதுர மீட்டரில் நூலகம், ஆண்கள் மற்றும் மகளிர் கழிப்பறை) மணிமண்டபம் அமைக்க ஏதுவாக ரூ.1.50 கோடிக்கான தோராய திட்ட மதிப்பீட்டை (சிலை அமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு) அரசுக்கு அனுப்பி வைத்து, அந்த தோராய திட்ட மதிப்பீட்டுக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கும்படி கோரியுள்ளார்.



    அரசின் கவனமான பரிசீலனைக்கு பிறகு, முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டரின் அறிக்கை மற்றும் முதன்மை தலைமைப் பொறியாளரின் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட இடத்தில் 342.22 சதுர மீட்டரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

    மணிமண்டபம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடுகளில் அரசின் முன் அனுமதியின்றி எந்த வித மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனருக்கு முழுமையான பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பி வைக்கும்படியும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) அறிவுறுத்தப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதும், அதற்கான இடம் தேடும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  #SivanthiAditanar
    காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.#AnbumaniRamadoss
    சேதராப்பட்டு:

    மறைந்த வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி குருவுக்கு நினை வேந்தல் நிகழ்ச்சி பா.ம.க. சார்பில் புதுவை அருகே உள்ள பட்டானூரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதில், ராமதாஸ், காடுவெட்டி குருவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருக்கமாக கவிதை வாசித்தார். இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குருவை நான் எனது மூத்த சகோதரராக பாவித்து வந்தேன். கட்சியில் அதிக நாட்டம் கொண்டு செயல்பட்டதால் குரு தனது உடல்நலத்தை சரியாக கவனிக்கவில்லை.

    இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் அமெரிக்காவில் உள்ள டாக்டர்களின் ஆலோசனைகளை எல்லாம் பெற்று சிகிச்சை அளித்தனர்.

    அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என நினைத்தோம். ஆனால், வெளிநாடு செல்லும் அளவுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பு தரவில்லை.

    ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரி சிகிச்சைகள் எல்லாம் அளிக்கப்பட்டதோ அதே போல் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரை உயிருடன் மீட்டு வர முடியவில்லை.

    நினைவேந்தல் கூட்டத்தில் ராமதாஸ், ஜி.கே. மணி, அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற காட்சி

    அவரை இழந்ததால் எனது சொந்த சகோதரனை இழந்த உணர்வில் இருக்கிறேன். குருவை வன்னியர் சங்க தலைவராக பார்த்து விட்டு அந்த இடத்தில் இன்னொருவரை நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே, அந்த பதவியை நிரந்தரமாக குருவுக்கு விட்டு விட்டு 2 அல்லது 3 செயலாளர்களை நியமித்து வன்னியர் சங்கத்தை வழி நடத்தலாம்.

    காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும். கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்படும். அங்கு அமைய உள்ள புதிய சட்டக்கல்லூரி வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss
    ×