search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram"

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.5, ரூ.6 வரை குறைந்த பட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

    இதனிடையே சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் ,சாலை விஸ்தரிப்பு பணியும் நடந்து வரும் நிலையில் காத்திருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது .

    இந்தப் பள்ளி கட்டிடம் ஆனது சாலை விரிவாக்க பணியில் இடிபடும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இடித்து அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஊராட்சி கட்டிடம் உள்ளிட்டவைகளில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் பணியை பார்வையிட்டார்.

    • விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • இப்பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணி–களை மாவட்ட கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பனங்குப்பம் ஊராட்சியில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க–ப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பணி யினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கண்டமங்க–லம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.58 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு நூலகம் மாணவர்களுக்கும்ர பொது–மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவு புத்தகங்கள் வரவழைத்து வைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.14.37 லட்சம் மதிப்பீட்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் விவசாயப்பணிக்கு ஏற்ப பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவர்கள் பணி–யாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டு நன்றாக பராமரிக்க மருத்து––வர்களுக்கு அறிவுறுத்தி–னார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதி கரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அவர் களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருகிற 12.6.2022 அன்று நமத மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்பட வுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்ப–பைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி ஆகும். 12.6.2022 அன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரானா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்ர் மோகன் தெரிவித்துக் கொண்டார்.

    • லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார்.
    • விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவர் வண்டல்மணல் அள்ளுவதற்காக கடந்த 2019 ஜூன் மாதம் செஞ்சி தாசில்தார் ஆதிமூலம் என்பவரை அணுகினார். அப்போது தாசில்தார் ஆதிமூலம், விவசாயி வடிவேலுவிடம் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த விவசாயி வடிவேல் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதனடிப்படையில் தாசில்தார் ஆதிமூலம் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார். இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த அண்ணாதுரை, தாசில்தார் ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்தார்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் சாட்சியாக தற்போது வேளாண்துறை இயக்குனராக இருக்கும் முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
    • ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    விழுப்புரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம் (வயது 46), வேலு (45), ரகோத்தமன். இவர்கள் 3 பேரும் விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் விழுப்புரத்தில் நேற்று ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு சண்முகத்தின் ஆட்டோவில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோவை சண்முகம் ஓட்டினார்.

    விழுப்புரம்-சென்னை புறவழி சாலையில் உள்ள முத்தாம்பாளையம் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையை ஆட்டோவில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக ஆம்னிபஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சண்முகம் ஓட்டிவந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

    ஆட்டோவை ஓட்டிவந்த சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேலுவும், ரகோத்தமனும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வேலு பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ரகோத்தமனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 11 புதிய பஸ்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 82 பஸ்கள் உள்பட 555 புதிய பஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் மண்டலத்திற்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 பஸ்கள் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 11 புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை- சேலம், கள்ளக்குறிச்சி- சென்னை, சேலம்- சென்னை, திருவண்ணாமலை- சென்னை, புதுச்சேரி- சென்னை ஆகிய வழித்தடங்களில் 11 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கலெக்டர் சுப்பிர மணியன், ஏழுமலை எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் கணேசன், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், முருகதாஸ், சுந்தர்ராஜன், கோட்ட மேலாளர் துரைசாமி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பேரவை இணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கார்த்திகை தீபத்திருவிழா காணச்செல்லும் பக்தர்களுக்காக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    விழுப்புரம்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்.

    இதையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு கார்த்திகை தீபத்திருவிழா காணச்செல்லும் பக்தர்களுக்காகவும் மற்றும் பவுர்ணமி என்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #tamilnews
    ‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. #GajaCyclone
    விழுப்புரம்:

    தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த ‘கஜா’ புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பலத்த காற்றுடனும், இடி-மின்னலுடனும் கூடிய கன மழை பெய்தது. ‘கஜா’ புயலின் தாக்கம் விழுப்புரம் மாவட்டத்திலும் இருந்தது. மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், சின்னமுதலியார்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், மற்ற இடங்களில் சாரல் மழை தூறியது.

    புயல் கரையை தொட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது இடி-மின்னலுடன் கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது. பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மழை சற்று ஓய்ந்தது. மீண்டும் 6 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் காலை 10 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

    இந்த மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான சுதாகர் நகர், மணிநகர், கம்பன்நகர், ஆசிரியர் நகர், பாண்டியன் நகர், காந்தி நகர், சித்தேரிக்கரை, கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த மழையின் காரணமாக மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் பலத்த காற்று வீசியதன் காரணமாக ஒரு சில கிராமப்புறங்களில் மின்வயர்கள் அறுந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்திரா நகர், வ.பாளையம், நன்னாடு, தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை, வயலாமூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் செய்வதும் தடைபட்டது. இந்த மழையினால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் மட்டுமின்றி பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் என 1,884 நிவாரண முகாம்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருந்தது. இருந்தபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    வானூர் அருகே பொம்மையார்பாளையத்தில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பகுதியளவு சேதமடைந்த 11 வீடுகளின் சுவர்கள் நேற்று அதிகாலை புயல் காரணமாகவும், கடலில் ஏற்பட்ட அலையின் சீற்றம் காரணமாகவும் இடிந்து விழுந்தது. இந்த வீடுகளில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே சுனாமி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டதால் சேதமடைந்த வீடுகளில் பொதுமக்கள் யாரும் தங்காமல் காலியாகவே இருந்தது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.

    கல்வராயன்மலை அருகே மொட்டையனூர் மதுரா மலையரசன்பட்டு கிராமத்தில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் சின்னாண்டி, இளையராஜா ஆகியோரது வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

    அதுபோல் பொம்மையார்பாளையம் குப்பத்தில் 30 குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து சென்று அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்கள் விருப்பத்தின்பேரில் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தங்கினர்.

    மேலும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்காணத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தில் இருந்த காட்டுவாகை மரம் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த சாலையில் ½ மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதுபோல் கள்ளக்குறிச்சி- கூத்தக்குடி சாலையில் வரஞ்சரம் என்ற இடத்தில் புளிய மரமும், கடலூர்- திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரத்தில் வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இதையடுத்து ராஜாவின் மனைவி ஜெயக்கொடி, மகன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று காலை 6 மணிக்கு எழுந்து, வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது மழையில் நனைந்திருந்த வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜா மீது விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கல்வராயன்மலையில் பெய்த கனமழை காரணமாக பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வனப்பகுதியில் உள்ள நீரோடைகளின் வழியாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 37 அடியை எட்டியது. உளுந்தூர்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால், உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கியது. மழை ஓய்ந்ததும் காலை 9 மணியளவில் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று வடிகால் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்றினர். இதேபோல் கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக செஞ்சி பஸ் நிலைய வளாகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    இதேபோல் திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, ஒலக்கூர், விக்கிரவாண்டி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 843.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வளவனூரில் 51 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக திருவெண்ணெய்நல்லூரில் 4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. #GajaCyclone
    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.130 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    விழுப்புரம்:

    பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்து அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 90 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான ஒரு ஆண்டு கட்டணத்தை லாரி உரிமையாளர் சங்கம் செலுத்துவதை ஏற்றுக் கொண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் சரக்குகளை இறக்கப்பட்டதும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் லாரிகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் லாரிகள் ஸ்டிரைக்கால் சில லாரிகள் மட்டுமே சென்றன.

    விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் இயக்கப்படாததால் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து பொருட்கள் ஏற்றி செல்லும் 800 சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

    கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பண்ருட்டியில் இருந்து தினமும் கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு 100-க்கணக்கான லாரிகளில் முந்திரி பருப்பு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    இன்று லாரிகள் ஓடாததால் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளரும், உற்பத்தியாளர் சங்க தலைவருமான ரமேஷ் தெரிவித்தார். #LorryStrike
    ×