என் மலர்
நீங்கள் தேடியது "Transport workers"
- மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டிப்போ முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (29-ந் தேதி) அரசை கண்டித்து மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அந்த அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்புள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் கிருஷ்ணன், துணை பொது செயலாளர் தேவராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் பிச்சைராஜன், மாவட்ட செயலாளர் பால்முருகன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மாதந்தோறும் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 86 மாத அகவிலைப்படி உயர்வு தொகை நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக இன்று காலை பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
- போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜ் விளக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஐவின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஷோபன்ராஜ், அந்தோணி, லட்சுமணன், சுரேஷ், சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. இணைந்து, மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
மண்டல தலைவர் அழகர்சாமி முன்னிலை யில் நடந்த இந்த போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற- மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் தர வேண்டும்.
ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வேலைநிறுத்தம் செய்த 21 நாட்களை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பாபு, ஸ்டாலின், ஆள வந்தார், ராஜேஷ், கண்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.
ஊதிய உயர்வு, பென்சன் பணம், ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் காலவரையற்ற ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபட்டனர்.
இதில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் ‘ஸ்டிரைக்’ ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில் நிலுவைத் தொகை, பென்சன் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 1-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபடப்போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். அனேகமாக தீபாவளிக்கு முன் ‘ஸ்டிரைக்‘ நடைபெறலாம் என தெரிகிறது.
இதுபற்றி சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:-
போக்குவரத்து கழகத்தில் கடந்த ஸ்டிரைக்கின் போது என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. எதையுமே அரசு நிறைவேற்றவில்லை.
போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விசயங்களை கூட அரசு அமல்படுத்தாமல் உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 11 மாதமாக பென்சன் தராமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #TNBusStrike #BusStrike
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து செயலாளர் டேவிதார் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர்.
பஸ் தொழிலாளர்கள் பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திட்டமிட்டு அங்கு திரண்டனர்.
தொ.மு.ச. செயலாளர் சண்முகம், பொதுச் செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஏ.சவுந்தர் ராஜன், சி.ஐ.டி.யூ. சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், பாட்டாளி தொழிற்சங்க முத்து குமார், ஏ.ஐ.டி.யூ.சி லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் பஸ் தொழிலாளர்கள் குவிந்தனர்.
அரசுக்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்து முழக்கமிட்டனர். சிறிது நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அங்கிருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்து கைது செய்தனர்.
பல்லவன் இல்ல சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முதலில் தொழிற்சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அதன் பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பஸ் மற்றும் வேன்களில் கொண்டு செல்லப்பட்டனர்.
போராட்டத்தில் தொழிலாளர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் அதிகளவு குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கைதானார்கள். #Transportworker
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் ராபின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், தொழிற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முரளிதரன், குமார், பிரபு சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் திரளான அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும், பெட்ரோல், கியாஸ், டீசல் வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும், ஆட்டோக்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் தொழில் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன.
அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, ஆம்பூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தன.
இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சம்பத், ஆம்பூர் அரசு, பாலகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கச்சாவடி கட்டணத்தை கைவிடக்கோரியும், மோட்டார் வாகன துறைக்கு தனிவாரியம் அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுற்றுலா வேன், கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்துடன் மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து அகில இந்திய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சிகளை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சண்முகம் தலைமையில், பொருளாளர் நடராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேசியதாவது:-
மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் பஸ் நடத்துனர் லைசென்சு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் நடத்துனர் இல்லாத பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவில் போக்குவரத்து தொழிலை நசுக்கும் பல்வேறு அபாயங்கள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, உரிய ஊதியத்தையும், பதவி உயர்வையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பினோம். இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் கொடுத்தோம்.
அதன்பிறகு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தொழிலாளர் நல அலுவலர்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் கூறிவிட்டனர்.
இதனால் மண்டல அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் செய்து தொழிலாளர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி உள்ளோம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் வேலைநிறுத்தம் பற்றி அறிவிக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.