என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    • தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.

    சென்னை:

    மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பஸ்களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப்போது பஸ்களை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன. அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பஸ்களை இயக்க இருக்கிறது.

    கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பஸ்கள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.

    • மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
    • முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்

    முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

    மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.

    அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு நாளை முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • முகாமில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்,

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணிபாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 225 நபர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    மேல்சிகிச்சை தேவைபடு பவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இம்முகாமில் பொது மேலாளர்கள் இளங்கோவன், முகமதுநாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, ராஜேஷ், பணி மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராஜசேகர், மருத்துவர்கள் குருநாதன், சினேகா, செல்வராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.
    • சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சி.டி.சி., டிப்போ -2ல் சென்று வர காங்கயம் ரோட்டில் இருந்து கோவில் வீதி வழியாக வழி உள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.இதனால் பஸ் நிலையம் மற்றும் பிற பகுதியில் இருந்து இரவு நேர நிறுத்தி வைப்புக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் வளம்பாலம் சாலை வழியாக சென்று விநாயகர் கோவில் வீதி வழியாக பணிமனை வந்தடைகிறது.காலையில் பஸ் டிரிப் துவங்கும் போது மேற்கண்ட வழியில் ஒரே நேரத்தில் பணிமனையில் நிற்கும் அனைத்து பஸ்கள் வெளியே வர முயல்வதால் நெரிசல் அதிகமாகிறது.

    எனவே பணிமனை செல்லும் வழித்தடத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும்.
    • பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகிறது.

    பொதுவாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன. இடங்கள் நிரம்பாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இடங்கள் நிரம்புகிறது.

    நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் பயண சலுகை திட்டம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    5 முறை பயணம் செய்வதற்கு சலுகை கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் பாதி கட்டணம் செலுத்தினால் போதும். இந்த சலுகையில் ஏசி பஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு பஸ்களுக்கும் பொருந்தும்.

    தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    50 சதவீத கட்டண சலுகை திட்டம் மே 1-ந் தேதி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஒரு மாதத்தில் 6 முறை பயணத்தில் இருந்து சலுகை கட்டணம் கிடைக்கும்.

    ஒரே இடத்திற்கு இந்த பயணம் அமைய வேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை வர வேண்டும். பயணம் செய்யும் இடம் மாறக்கூடாது. ஒரே இடமாக இருக்க வேண்டும். இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.

    எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது. இதற்கேற்றவாறு சாப்ட்வேர் பொருத்தப்படுகிறது. இந்த பணி ஒரு சில நாட்களில் நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
    • 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது.

    ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும்.

    பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.

    செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-20 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.

    • அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.
    • சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

    வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

    இந்நிலையில் அரசு பேருந்துகளில் வரும் 23ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்க கூடாது என வலியுறுத்தியுள்ளது.

    • கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.
    • மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடந்தது.

    மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது.

    ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார்.

    தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
    • ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கி சென்றுவிட்டனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர். பயணிகளிடம் பஸ் போகாது என்று கூறிவிட்டனர். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவிக்கின்றனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அரசுப் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    • அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் கூட்டம் அதிகரித்தது.
    • போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலையில் திடீரென அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர், கண்டக்டர்கள் இறங்கிவிட்டனர்.

    பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் டிரைவர், கண்டக்டர்கள் பேருந்துகளை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஒரு சிலர் அவசரமாக போகவேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் அதிக பணம் கொடுத்து ஆட்டோக்களில் ஏறி சென்றனர்.

    அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. போராட்டம் நடத்தும் ஊழியர்களை பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். இதுபோன்று போராட்டம் நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.

    இதற்கிடையே போராட்டம் நடத்தும் ஊழியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் முன்வந்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு பணிமனைளில் இருந்தும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.

    அடுத்தகட்டமாக வரும் 31ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.
    • கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் இன்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வழித்தடங்களிலும் இயங்கிக்கொண்டிருந்த பேருந்துகளை அப்படியே நிறுத்தினர். பல பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்புவோர், குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருநது நிறுத்தங்களில் கூட்டம் அதிகரித்தது. பேருந்துகள் எப்போது இயங்கும் என்று உறுதியாக தெரியாத நிலையில், கையில் பணம் வைத்திருந்தவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் செல்லத் தொடங்கினர்.

    பேருந்துகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் டாக்சிகளில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மேலும் இன்னலுக்கு ஆளாகினர். ஒருபுறம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி தங்களை தவிக்கவிட்ட நிலையில், இதுதான் கிடைத்த வாய்ப்பு என ஆட்டோ டிரைவர்களும், டாக்சி டிரைவர்களும் இப்படி கட்டணத்தை உயர்த்துகிறார்களே என ஆவேசம் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் விதிகளுக்குட்பட்டு கட்டணம் வசூலித்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியது.

    சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் படிப்படியாக பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

    ×