search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state transport corporation"

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
    • அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.

    இந்த போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 1404 பஸ்கள் இதற்கான மாற்று பஸ்கள் ஆகும். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

    அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங் கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதியில் 600 முதல் 700 ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதால் பஸ்களின் இயக்கங்கள் மேலும் பாதிக்கப்படும்.

    தமிழக போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி நில வரப்படி 1,44,818 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நிலவரப்படி 1,16,259 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 28,559 ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வு பெற்ற டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் தொழிலாளர்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    • தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
    • 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது.

    சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது.

    ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும்.

    பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.

    செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-20 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.

    • மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.
    • சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சி.டி.சி., டிப்போ -2ல் சென்று வர காங்கயம் ரோட்டில் இருந்து கோவில் வீதி வழியாக வழி உள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.இதனால் பஸ் நிலையம் மற்றும் பிற பகுதியில் இருந்து இரவு நேர நிறுத்தி வைப்புக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் வளம்பாலம் சாலை வழியாக சென்று விநாயகர் கோவில் வீதி வழியாக பணிமனை வந்தடைகிறது.காலையில் பஸ் டிரிப் துவங்கும் போது மேற்கண்ட வழியில் ஒரே நேரத்தில் பணிமனையில் நிற்கும் அனைத்து பஸ்கள் வெளியே வர முயல்வதால் நெரிசல் அதிகமாகிறது.

    எனவே பணிமனை செல்லும் வழித்தடத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்தது போக மீதிப்பணம் ரூ.75 தர மறுத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெண் பயணிக்கு ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    பொன்னேரியை அடுத்த வெலூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி திருவெல்லிவாயலில் இருந்து தனது கிராமமான வெலூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் உறவினர்கள் 4 பேரும் சென்றனர்.

    இவர்கள் பயணம் செய்த பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கண்டக்டரிடம் மலர்விழி 5 டிக்கெட் தரும்படி கேட்டார். அதற்காக ரூ.100 கொடுத்து டிக்கெட்டுக்கு தலா ரூ.5 வீதம் ரூ.25 போக மீதம் ரூ.75 தரும்படி கேட்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 2 பேர் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். எனவே டிக்கெட்டும், மீதிபணமும் தர கண்டக்டர் மறந்துவிட்டார்.

    இதற்கிடையே அரசு பஸ்சில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது மலர்விழி, அவரது உறவினர்களிடம் டிக்கெட் இல்லை. எனவே நடந்த விவரங்களை அவரிடம் மலர்விழி கூறினார். அதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏற்கவில்லை.

    மாறாக டிக்கெட்டுகளை கண்டக்டரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர்கள் தாங்கள் கூறியபடி எழுதி தரும்படி மலர்விழியிடம் கூறினர். பயம் காரணமாக அவரும் அப்படியே எழுதி கொடுத்தார். இதையடுத்து அபராதம் எதுவும் வசூலிக்கவில்லை.

    இதற்கிடையே ஊர் வந்ததும் தான் கொடுத்த 100 ரூபாயில் டிக்கெட் கட்டணம் போக மீதி பணம் 75 ரூபாயை திரும்ப தரும்படி கண்டக்டரிடம் மலர்விழி கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாளரிடம் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி புகார் கடிதம் அனுப்பினார். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அதே அலுவலகத்தின் பொது மேலாளருக்கும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி புகார் மனு அனுப்பினார்.

    அவரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. எனவே திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு தரவேண்டிய மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்.

    வழக்கை விசாரித்த கோர்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மலர்விழிக்கு மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    அதில் ரூ.2 ஆயிரம் கோர்ட்டு செலவுக்கும், ரூ.5 ஆயிரம் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×