search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

    அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

    பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

    • அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.

    இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
    • தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தகவல்.

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
    • அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    சென்னை:

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

    இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.

    அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.


    வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

    எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, "இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்"என்றார்.

    • காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
    • விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.

    இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.

    அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.


    இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
    • காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.

    அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
    • தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் முழு அளவில் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

    * தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

    * தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.

    * போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    • போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

    தருமபுரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து, அரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்தை நிறுத்தாமல், பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஊர்வலமாக பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை வரை நடந்து சென்றனர்.

    அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.


    தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, தொ.மு.ச.வை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோன்று பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கையில் தொழிற்சங்க அடையாள அட்டையை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
    • மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    மதுரை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 98 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பஸ் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அதிமுக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் (9-ந் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் இதர தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்ததால் மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.


    இந்த நிலையில் போக்குவரத்து பணிமனை முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் பணிமனைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.
    • இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    திருச்சி:

    அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று (புதன்கிழமை) 3-வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.

    இதில் நேற்று குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலை 8 மணி நிலவரப்படி அரசு புறநகர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதே நேரம் டவுன் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

    ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் புறநகர் பஸ்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க தற்காலிக டிரைவர் கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தொ.மு.ச. மற்றும் தமிழக அரசின் ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக பணியில் 2,3 ஷிப்ட் வேலை செய்கின்றனர்.


    இதற்கிடையே தற்காலிக டிரைவர் கண்டக்டர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே அவர்களை வழிநடத்தும் சுவாரசியம் நடந்தது.

    இன்று காலை திருச்சியில் இருந்து இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவருமே தற்காலிக பணியாளர்கள். இவர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே பஸ் நிறுத்தத்தை அடையாளம் காட்டினர்.

    அந்த தற்காலிக கண்டக்டர் சீருடை அணியவில்லை. வழக்கமாக கண்டக்டர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தோள்பை வழங்கப்படும். ஆனால் இந்த தற்காலிக டிரைவருக்கு கலெக்சன் தொகையை வைப்பதற்கு மஞ்சபை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஒரு கையில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் மஞ்ச பை வைத்து அதில் கலெக்சன் தொகையை போட்டுக் கொண்டிருந்தார். மஞ்சப்பை கண்டக்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
    • சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெருமளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆனாலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சவுந்தர் ராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எவ்வித பலனும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

    நியாயமாக எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து இயன்றதை இப்போது செய்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், மாறாக நிதிநிலைமையை காரணம் காட்டி எதையும் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் ஊடகங்களில் கூறுவது ஏமாற்று வேலை. அவர் பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தவறும் இல்லாதது போல காட்டிக் கொள்கிறார்.

    தொழிற்சங்கங்களுக்கு முறையான அழைப்பு கொடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் அல்லது பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தான் முறை. ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள் மத்தியில் கூறுவது எங்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறோம்.

    வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அரசு வெளியாட்களை வைத்து பஸ்களை இயக்குகிறது. இதுவும் ஏமாற்று வேலை தான்.

    அதிக ஊழியர்கள் பணிக்கு வந்ததாக அமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரே பஸ், பல வழித்தடங்களில் இயக்கப்படும் நிலை தான் உள்ளது. 106 சதவீதம் பஸ்கள் ஓடுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×