search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் பணியால் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் வழித்தடம் மாற்றம்
    X

    கோப்புபடம்.

    கால்வாய் பணியால் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் வழித்தடம் மாற்றம்

    • மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.
    • சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சி.டி.சி., டிப்போ -2ல் சென்று வர காங்கயம் ரோட்டில் இருந்து கோவில் வீதி வழியாக வழி உள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.இதனால் பஸ் நிலையம் மற்றும் பிற பகுதியில் இருந்து இரவு நேர நிறுத்தி வைப்புக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் வளம்பாலம் சாலை வழியாக சென்று விநாயகர் கோவில் வீதி வழியாக பணிமனை வந்தடைகிறது.காலையில் பஸ் டிரிப் துவங்கும் போது மேற்கண்ட வழியில் ஒரே நேரத்தில் பணிமனையில் நிற்கும் அனைத்து பஸ்கள் வெளியே வர முயல்வதால் நெரிசல் அதிகமாகிறது.

    எனவே பணிமனை செல்லும் வழித்தடத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×