என் மலர்
நீங்கள் தேடியது "loss"
- அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
- தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கக்கரை சுகுமாரன் கொடுத்துள்ள மனுவில், ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் சம்பா அறுவடை பணி தொடங்கிவிட்டது. எனவே தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லப்பன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மழை நீர் செல்ல வழி இன்றி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்டு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
- பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் செண்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் செம்மண் பகுதியான தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சென்டி பூ சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து விவசாயி கள் கூறுகையில், 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியும் விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது.
ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம். ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.
ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும்.
சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றனர்.
- விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
- 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.
கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவரது மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர்.
சவுந்தர்யா திருமணமாகி கணவருடன் காந்தி மாநகரில் வசித்து வருகிறார். நாகராஜூம், ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழை பழம் வியாபாரம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த நாகராஜ் ,அவரது மனைவி தேன்மொழி, மகன் ஆனந்தகுமார் ஆகியோர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். அப்போது சவுந்தர்யா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.
போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தாய் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த குமார் பரிதாபமாக இறந்தார்.
நாகராஜ், தேன்மொழி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்தும் பீளமேடு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நாகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் வியாபாரத்துக்காக மொத்த வியாபாரிகள் சிலரிடம் கடனுக்கு பழங்களை வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நாகராஜ், தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அவற்றை குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி எனும் வாட் வரியை மாநில அரசுகளும் கணிசமாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இதையடுத்து பெட்ரோல்- டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வரிகள் விதிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு மிக குறைந்த விலையில்தான் பெட்ரோல்-டீசலை வினியோகம் செய்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.39.21க்குதான் வழங்குகிறது. ஆனால் அந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலையை 2 மடங்கு அதிகரிக்க செய்து விடுகின்றன.
மத்திய அரசு விதிக்கும் கலால் வரிப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.19.48 கிடைக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33ஐ மத்திய அரசு வருவாயாக பெறுகிறது. இந்த வரிக்கு பிறகு மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப வாட் வரியை விதிக்கின்றன.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பையில் 33.12 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மிக குறைவாக 26 சதவீதம்தான் விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெட்ரோல்- டீசல் மீது 32.16 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக கணக்கிட்டால் மாநில அரசுகள் சுமார் 30 சதவீதம் வாட் வரியை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கின்றன.
இதனால்தான் கடந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருந்தது.
பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் மிக எளிதாக வருவாய் வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றை இழக்க மனமில்லாமல் உள்ளன. மாநில அரசுகளை பொறுத்த வரை ராஜஸ்தான், ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தங்களது வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று வாட் வரியை குறைத்துள்ளன.
ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை கலால் வரியை குறைக்க இயலாது என்று திட்டவட்டமாக 2 தடவை அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்து விட்டது. இந்த பிரச்சனைகள் இன்னும் சில தினங்களில் தானாக சரியாகி விடும்.
இதற்காக கலால் வரியை குறைத்தால் அது மத்திய அரசின் நிர்வாக பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும்.
அப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் போனால் அதுவும் மக்களைதான் பாதிக்கும். எனவேதான் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும். இது வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தபோது இத்தகைய முடிவைதான் அதிகாரிகள் எடுத்தோம். தற்போதும் அதே முடிவை தான் கையாண்டு உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். #PetrolDieselPriceHike #CentralGovt
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சமீபத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.
பொதுக்கூட்டங்களிலும், காணொளி காட்சிகள் மூலம் விவசாயிகள் பொதுமக்களுடன் மோடி உரையாடி வருவது அனைத்தும் கண் துடைப்புக்காக மட்டுமே எனவும் சவ்கதா ராய் குற்றம்சாட்டியுள்ளார். #NoConfidenceMotion
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.
சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CAGreport