என் மலர்
நீங்கள் தேடியது "government buses"
- தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.
சென்னை:
மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பஸ்களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப்போது பஸ்களை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன. அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பஸ்களை இயக்க இருக்கிறது.
கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பஸ்கள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.
- மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
- இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.
மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-
பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.
பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.
குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.
அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.
ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.
எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-
அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
- அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
- ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
- நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திருப்பூா் மாநகராட்சி 3வது மண்டல மாநாடு ஏஐடியூசி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:-திருப்பூா் மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்.
அதேபோல வாா்டில் ஒரு இடத்திலாவது நூலகம் அமைக்க வேண்டும். மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகர பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மதுரை நகரில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 3 பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் பெங்களூரு, ஆந்திரா சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள், 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் தவிர 10-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் உண்டு. இங்கு இருந்து நகர் மற்றும் கிராமங்களுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
மதுரை மாநகர பஸ் நிலையங்களில் பனகல் சாலை, கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இருந்து நாள்தோறும் சுழற்சி அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது மிகக் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அண்ணா பஸ் நிலையம், கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகிய 3 பஸ் நிலையங்களில் பொதுமக்களின் வருகை குறைவு காரணமாக, அவை உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்கள் பராமரிப்பு இன்றி சீர்குலைந்து காட்சி அளிக்கின்றன. அங்கு மினி பஸ்களையே அதிகம் பார்க்க முடிகிறது.
தல்லாகுளம் பனகல் சாலையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இது மதுரை அரசு மருத்துவமனைக்கு மிகவும் அருகில் உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இந்த பஸ் நிலையம் பயனுள்ளதாக இருந்தது.
எனவே அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் மினி பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.
மதுரை அழகர் கோவில் சாலையில் கே.புதூர் பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து மேலூர், அழகர் கோவில் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களை புறப்பட்டு செல்கின்றன.
ஆனையூர் பஸ் நிலையத்தில் இருந்தும் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகரங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அங்கு இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு போனால் அதிர்ஷ்டம் என்ற நிலை தான் உள்ளது. ஆனையூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கான கட்டுமான பொருட்களை சேகரித்து வைக்கும் தளமாக ஆனையூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.
மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதுவும் தவிர உபரி பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
எனவே மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது குறைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
- மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.
இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.
தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.
மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
- நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
- தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்திற்கு தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
பஸ்கள் மாயம்
ஆனால் சமீப காலமாக மதியம் 1.15 மணிக்கு பிறகு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அடிக்கடி மாயமாகி விடுவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். அதாவது மதியம் 1.15-க்கு பின்னர் 1.40 மற்றும் 2.20 மணிக்கு அரசு பஸ்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்லும்.
இந்த பஸ்கள் குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினத்திற்கு செல்லும். இதேபோல் 2.45 மற்றும் 3.15 மணிக்கு தனியார் பஸ்கள் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம்
இந்நிலையில் மதியம் 1.15-க்கு பின்னர் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் அதனை நம்பி வரும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் புதிய பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனை தனியார் பஸ்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சரக்குகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக சில பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்
- நாகர்கோவிலில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வள்ளியூர்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆசாத், மாவட்ட பொருளாளர் ராஜன் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மண்டலத்தை சேர்ந்த மதுரை பஸ்கள் 18, ஏ.சி. வகை பஸ்கள் 3, விருதுநகர் டெப்போ பஸ் 1, பழனி டெப்போ பஸ் 2, குமுளி டெப்போ 3, திண்டுகல் டெப்போ 2, போடி டெப்போ 2 ஆக 31 பஸ்கள் நாகர்கோவிலுக்கு செல்கின்றன.
இந்த அனைத்து பஸ்களும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒன்-டூ-ஒன் என வள்ளியூர் ஊருக்குள் வராமல் புற வழிச்சாலை வழியாக செல்கின்றது.
மேற்குறிப்பிட்டுள்ள பஸ்கள் தடம் எண் எழுதப்படாத பஸ்களாகவும் செல்கின்றன. அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என விதிமுறையும் அரசின் ஒழுங்கும் இருக்கின்ற நிலையில் வள்ளியூரில் பஸ் நிறுத்தம் இருந்தும் நெல்லை -நாகர்கோவில் பஸ் நிலை யங்களில் காத்திருக்கும் வள்ளியூர் பயணிளை ஏற்றாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றது.
வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் வள்ளியூர் பஸ் நிலையத்தை நம்பிதான் வெளியூர்களுக்கு செல்கிறார்கள். மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக 31 பஸ்களை இயக்கியும் மதுரை, திண்டுகல், குமுளி, பழனி, போடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்ற வள்ளியூர் பயணிகள் இந்த அரசு பஸ்களில் வள்ளி யூருக்கு வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு அரசு போக்கு வரத்து துறைக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலைத்திற்கு வந்து பயணி களை ஏற்றவும், இறக்கி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நெல்லை மண்டலத்தில் நாகர்கோவி லில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர வேளாங் கண்ணிக்கு செல்லும் பஸ், ஞாயிற்றுக்கிழமை தினங்களில் சென்னை செல்லும் சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலை செல்லும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் வள்ளியூர் பஸ் நிலையம் வருவதில்லை.
மேற்குறிப்பிட்ட பஸ்களும் தடம் எண் குறிப்பிடப்பாத பஸ்களாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் வருடத்தில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இடைநில்லா பஸ்களாக 3 பஸ்களை இயக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.
அதே நேரத்தில் 3 பஸ்கள் வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி ஊர்களில் நின்று செல்லவும் அனுமதி வழங்கினார்கள். ஆனால் தற்போது நாகர்கோவிலில் இருந்து 30 பஸ்கள் 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் பயணிகள் இருந்தாலும் இல்லா விட்டாலும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் மதுரை மண்டலத்தில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 60 பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலையம் வந்து செல்லாமல் புற வழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மார்த்தாண்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாதாரண பஸ் நாகர்கோவில் வரையில் சாதாரண பஸ்சாகவும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரையில் இடை நில்லா பஸ்சாகவும் இயக்கப்பட்டு பின்னர் நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாதாரண பஸ்சாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வள்ளியூர் பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே தடம் எண் எழுதப் படாத அனைத்து டி.எல்.எக்ஸ். பஸ்களையும் வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா தாக்குதல் தீவிரமாக இருந்த நேரத்தில் பல கிராமப்புற பஸ்கள் நிறுத்தப்பட்டன.
- மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை :
ஏழை,நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருப்பது பொதுப் போக்குவரத்து வாகனமான அரசு பஸ்கள் ஆகும்.கொரோனா தாக்குதல் தீவிரமாக இருந்த நேரத்தில் பல கிராமப்புற பஸ்கள் நிறுத்தப்பட்டன.அவற்றில் பல பஸ்கள் திரும்பவும் இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.அத்துடன் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு அதனால் ஆகும் செலவினங்களை ஈடுகட்டும் வகையில்,வருவாய் குறைந்த பல கிராமப்புற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.தனியார் பஸ்களைப் போல லாப நோக்கம் மட்டுமே கொண்டு அரசு பஸ்களை இயக்குவது சரியான முடிவாக இருக்க முடியாது.கிராமப்புற பஸ்களை லாப நோக்கம் கருதாமல் பொதுமக்கள் நலன் கருதியே இயக்க வேண்டும்.
மடத்துக்குளத்தையடுத்த கிளுவங்காட்டூர் வழியாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிளுவங்காட்டூரில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊரின் வழியாக 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.இதில் உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம்,கிளுவங்காட்டூர்,பார்த்தசாரதிபுரம், குமரலிங்கம் வழியாக கல்லாபுரம் செல்லும் 32 ஏ என்ற எண் கொண்ட அரசு பஸ் அதிகாலை 6 மணிக்கு உடுமலையிலிருந்து பயணத்தைத் தொடங்கி 6 முறை ஊருக்குள் வரும்.ஆனால் தற்போது இந்த பஸ் உரிய நேரத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை.எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாத நிலையே உள்ளது.இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டால் அடுத்த சிங்கிள் இன்னும் லேட்டாக வருவேன்.எப்படி வேலைக்கு போவீர்கள் என்று பார்க்கலாம் என்று சவால் விடுவது போல பேசுகிறார். இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம்,கிளுவங்காட்டூர்,எலையமுத்தூர்,கல்லாபுரம் வழித்தடத்தில் அமராவதி செல்லும் 37 ம் எண் அரசு பஸ் முன்பு பலமுறை இயக்கப்பட்டு வந்தது.தற்போது காலை மற்றும் மாலை வேளைகளில் என ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.2 பஸ்களும் பெரும்பாலும் மதியத்துக்கு மேல் இயக்கப்படுவதில்லை.இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்காக வெளியில் சென்றவர்கள் ஊர் திரும்புவதில் சிரமங்களை சந்திக்கின்றனர்.எனவே கிராமப்புற மக்கள் பெருமளவில் நம்பியிருக்கும் அரசு பஸ்களை உரிய நேரத்தில் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர்,எம்.எல்.ஏ, தமிழ்நாடு அரசு போக்குவர த்துக்கழக கோவை மண்டல மேலாளர்,உடுமலை கிளை மேலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
- அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
- நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.
ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.
- கூடுதல் பஸ்களை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலை தூரத்தில் இருந்து கல்வி பயில வரும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் அதில் மாணவர்கள் முண்டியடித்துக் க்கொண்டு ஏறும் நிலை உள்ளது.
பஸ்சில் இடம் கிடைக்காத மாண வர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு பயணம் செய்த மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு பஸ்கள் மூலம் வருகின்றனர்.
ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ஒருசில பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சிந்தாமணி, பொட்டபாளையம், பனையூர் மற்றும் அந்தப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மதுரை கீழவெளி வீதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
அரசு பஸ்களில் வரும் இவர்கள் பெரும்பாலான நாட்களில் கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. போதுமான பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படாததால் பள்ளி விடும் மாலை நேரங்களில் அரசு பஸ் படிகளில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு பயணம் செய்வதை காண முடிகிறது.
இதே போன்ற நிலை மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






