search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayalpattinam"

    • காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது.
    • துணைத்தலைவர் சுல்தான் லெப்பை உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற நோக்கத்தை வலியுறுத்தி காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார் சிங் வழிகாட்டுதலின்படி, நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.

    இதில் துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சுகு ரெங்கநாதன், கதிரவன், பூங்கொடி, சுயஉதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். இந்த சுகாதாரப் பணியின் போது காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

    • காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.
    • நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.விழாவில் தினமும் காலையில் நபிமொழிகள் ஓதப்பட்டு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் முகைதீன் அப்துல் காதிர் தவ்ஹீத் இறைவணக்கம் பாடினார். அன்றைய நபிமொழிகளுக்கான விளக்கவுரையை மௌலவி முகம்மது முஹ்யித்தீன் நிகழ்த்தினார்.இதனை தொடர்ந்து அகமது அப்துல் காதிர் ஆலிம் கூட்டு துஆவின் சிறப்புகளின் பற்றி விளக்கினார்.முத்துவாப்பா அறிமுக உரையாற்றினார்.

    பின்னர் உலக மக்கள்நலன் வேண்டி தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளிவாசல் கதீபு ரகமத்துல்லாஹ் ஆலிம் கூட்டு பிரார்த்தனையை நடத்தினார்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற் றனர். இதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்திய மௌலவி ரகமத்துல்லாஹ் ஆலிம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

    மாலையில் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் சார்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக இன்று காலை நேர்ச்சை வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மஜ்லிஸுல் புகாரி சபையின் தலைவர் அகமது அப்துல் காதிர் ஆலிம், துணைத்தலைவர் ஹபீபுர் ரகுமான் ஆலிம், மேலாளர் காஜா முகைதீன் ஆலிம், இணைச் செயலாளர்கள் மூசா நெய்னா, நூருல் அமீன், ஹாமீது ரிபாயி, துணைச் செயலாளர் ஜெய்னுல் அமீன் ஆகியோரும் விழா கமிட்டி நிர்வாகிகளான சொளுக்கு செய்யிது முகம்மது சாஹிப், ஜாபர் சாதிக், முகம்மது தம்பி ஆகியோர் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை செந்தில் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

    விழாவை முன்னிட்டு காயல்பட்டினத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
    • தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்திற்கு தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    பஸ்கள் மாயம்

    ஆனால் சமீப காலமாக மதியம் 1.15 மணிக்கு பிறகு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அடிக்கடி மாயமாகி விடுவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். அதாவது மதியம் 1.15-க்கு பின்னர் 1.40 மற்றும் 2.20 மணிக்கு அரசு பஸ்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்லும்.

    இந்த பஸ்கள் குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினத்திற்கு செல்லும். இதேபோல் 2.45 மற்றும் 3.15 மணிக்கு தனியார் பஸ்கள் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம்

    இந்நிலையில் மதியம் 1.15-க்கு பின்னர் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் அதனை நம்பி வரும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் புதிய பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இதனை தனியார் பஸ்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சரக்குகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக சில பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
    • ஜெயக்குமார் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியில் 1- வது வார்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இங்குள்ளவர்களில் பலர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 300 குடிசைகளை அமைத்திருந்தனர். ஆனால் இது ஆக்கிரமிப்பு எனவும் புகார் எழுந்தது.இந்த நிலையில் அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி என்பவரின் மகனான செல்வகுமார் தனது நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் அங்குள்ள குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கூடினர். பள்ளிக்கூடம் அருகில் குப்பையை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமார், நான் இப்பகுதி கவுன்சிலர். குப்பைகளை கொட்டுவதற்காக இந்த இடத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. மீறினால் அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிடுவேன். இதற்கு மேலும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி ஊர் நல கமிட்டி பொறுப்பாளரான ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகிய 3பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது மற்றும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாமு இலியாஸ் (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது (35). இவர்கள் இருவருக்கும் இடையில் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனிடையே சில நாட்களாக இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோழி ஹமீது நேற்று மதியம் சாமு இலியாசிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாமு இலியாசியிடம், ஹமீது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி சாமு இலியாஸ் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது
    • குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துப்பேச்சி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    தகராறு

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ராஜலிங்கம் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று அவர் தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேச்சி தனது மகள்களை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

    மர்ம சாவு

    பின்னர் நேற்று காலையில் முத்துப்பேச்சி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது அங்கே ராஜலிங்கம் தரையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இது பற்றி அவரது மூத்த மகள் கூறுகையில், அப்பா மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டார். நான் உடனே மின்விசிறியில் இருந்து சேலையை அகற்றி அவரை மீட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ராஜலிங்கம் இறந்தது பற்றி அவரது அண்ணன் பழனி முருகன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் தற்கொலை தான் செய்தாரா? தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
    • சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எனது குப்பை எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சூரிய முத்து. இவரதுமகன் சந்தனகுமார் (வயது 22).டைல்ஸ் ஒட்டும் தொழில்செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை சூரிய முத்து கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சந்தனகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சந்தனகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சந்தன குமாரின் அண்ணனான ஜெய கண்ணன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப் பதிவு செய்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் அப்துல் அஸ்ஷப் வரவேற்று பேசினார். சாகுல் ஹமீது இறை வணக்கம் பாடினார். நகர பொருளாளர் சுலைமான் அறிக்கை வாசித்தார்.

    மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    இதன்படி புதிய தலைவராக நூஹ் சாகிப், செயலாளராக அபூ சாலிஹ், பொருளாளராக சுலைமான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை காயல் பட்டினத்தில் நடத்துவது, கட்சியின் 75 ஆண்டு விழாவை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.நிறைவில் முகமது உமர் பிரார்த்தனை பாடினார்.

    காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனது குப்பை எனது பொறுப்பு என்ற நோக்கத்தில் அலியார் தெருவில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவிகளின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடந்தது.

    இதில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். தொடர்ந்து வாகனங்கள் மூலம் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் விநியோகம் ஆகிய நடவடிக்கைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிகளில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  

    வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர்   வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காயல்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய பூப்பந்து போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையை தொடர்ந்து லீக் முறை ஆட்டத்திற்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. இவற்றில் சென்னை தெற்கு ரெயில்வே அணி முதலிடத்தை பிடித்து ரூ.40 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை வென்றது. 

    மும்பை மேற்கு ரெயில்வே அணி 2-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பெற்றது.சென்னை பி.எஸ். அப்துர் ரகுமான் க்ரஸன்ட் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும்,மங்களூர் ஆல்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிறைவு நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

    இதற்கான ஏற்பாடுகளை சுற்றுப்போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் நசீர் அகமது, செயலாளர் மாஸ்டர் பஷீருல்லாஹ், பொருளாளர் கட்டா மரைக்கார், துணைச் செயலாளர் ஷேக் உள்பட பலர் செய்திருந்தனர்.

    காயல்பட்டினம் அலியார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்ட பணிகள் தொடங்கின. 

    அலியார் தெரு பள்ளிக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மெஜில்லா பீரிஸ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஓடக்கரை பள்ளிக்கு ரூ.20.40 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஊர் தலைவரும் நகராட்சி கவுன்சிலருமான சுகு என்ற அரங்கநாதன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கல் அரசி,தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞரணி செயலாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தி.மு.க. துணை செயலாளர் காதர், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×