என் மலர்
நீங்கள் தேடியது "Kayalpattinam"
- உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
- கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.
விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
- நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை லெப்ட் இன் கர்னல் சுனில் உத்தம் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியின் என்.சி.சி. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து கடற்கரை பூங்கா வரை ஒற்றுமை ஓட்டம் நடத்தினர்.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செயது அகமது தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் செயது முகைதீன் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் முகமது காமில் செய்திருந்தார்.
- காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்
- வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ஓடக்கரை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 62). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
நேற்று அவரது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்ற நிலையில் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
- சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எனது குப்பை எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா நகராட்சி ஆணையாளர் குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் சுகாதார பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது
- குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருக்கு முத்துப்பேச்சி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
தகராறு
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ராஜலிங்கம் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று அவர் தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேச்சி தனது மகள்களை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.
மர்ம சாவு
பின்னர் நேற்று காலையில் முத்துப்பேச்சி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும்போது அங்கே ராஜலிங்கம் தரையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது பற்றி அவரது மூத்த மகள் கூறுகையில், அப்பா மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டார். நான் உடனே மின்விசிறியில் இருந்து சேலையை அகற்றி அவரை மீட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜலிங்கம் இறந்தது பற்றி அவரது அண்ணன் பழனி முருகன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் தற்கொலை தான் செய்தாரா? தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது மற்றும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.
- அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாமு இலியாஸ் (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். காயல்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோழி ஹமீது (35). இவர்கள் இருவருக்கும் இடையில் தொழில் ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனிடையே சில நாட்களாக இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோழி ஹமீது நேற்று மதியம் சாமு இலியாசிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தனக்கு ரூ.2 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாமு இலியாசியிடம், ஹமீது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி சாமு இலியாஸ் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
- ஜெயக்குமார் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியில் 1- வது வார்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களில் பலர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 300 குடிசைகளை அமைத்திருந்தனர். ஆனால் இது ஆக்கிரமிப்பு எனவும் புகார் எழுந்தது.இந்த நிலையில் அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி என்பவரின் மகனான செல்வகுமார் தனது நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் அங்குள்ள குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கூடினர். பள்ளிக்கூடம் அருகில் குப்பையை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமார், நான் இப்பகுதி கவுன்சிலர். குப்பைகளை கொட்டுவதற்காக இந்த இடத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. மீறினால் அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிடுவேன். இதற்கு மேலும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி ஊர் நல கமிட்டி பொறுப்பாளரான ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகிய 3பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
- தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்திற்கு தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
பஸ்கள் மாயம்
ஆனால் சமீப காலமாக மதியம் 1.15 மணிக்கு பிறகு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அடிக்கடி மாயமாகி விடுவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். அதாவது மதியம் 1.15-க்கு பின்னர் 1.40 மற்றும் 2.20 மணிக்கு அரசு பஸ்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்லும்.
இந்த பஸ்கள் குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினத்திற்கு செல்லும். இதேபோல் 2.45 மற்றும் 3.15 மணிக்கு தனியார் பஸ்கள் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம்
இந்நிலையில் மதியம் 1.15-க்கு பின்னர் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் அதனை நம்பி வரும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் புதிய பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனை தனியார் பஸ்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சரக்குகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக சில பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.
- நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் சபையின் 96-வது ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற்றது.விழாவில் தினமும் காலையில் நபிமொழிகள் ஓதப்பட்டு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று அபூர்வ துஆ என்கிற கூட்டு பிரார்த்தனை நடந்தது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் முகைதீன் அப்துல் காதிர் தவ்ஹீத் இறைவணக்கம் பாடினார். அன்றைய நபிமொழிகளுக்கான விளக்கவுரையை மௌலவி முகம்மது முஹ்யித்தீன் நிகழ்த்தினார்.இதனை தொடர்ந்து அகமது அப்துல் காதிர் ஆலிம் கூட்டு துஆவின் சிறப்புகளின் பற்றி விளக்கினார்.முத்துவாப்பா அறிமுக உரையாற்றினார்.
பின்னர் உலக மக்கள்நலன் வேண்டி தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளிவாசல் கதீபு ரகமத்துல்லாஹ் ஆலிம் கூட்டு பிரார்த்தனையை நடத்தினார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற் றனர். இதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்திய மௌலவி ரகமத்துல்லாஹ் ஆலிம் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
மாலையில் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் சார்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக இன்று காலை நேர்ச்சை வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மஜ்லிஸுல் புகாரி சபையின் தலைவர் அகமது அப்துல் காதிர் ஆலிம், துணைத்தலைவர் ஹபீபுர் ரகுமான் ஆலிம், மேலாளர் காஜா முகைதீன் ஆலிம், இணைச் செயலாளர்கள் மூசா நெய்னா, நூருல் அமீன், ஹாமீது ரிபாயி, துணைச் செயலாளர் ஜெய்னுல் அமீன் ஆகியோரும் விழா கமிட்டி நிர்வாகிகளான சொளுக்கு செய்யிது முகம்மது சாஹிப், ஜாபர் சாதிக், முகம்மது தம்பி ஆகியோர் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை செந்தில் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
விழாவை முன்னிட்டு காயல்பட்டினத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
- காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது.
- துணைத்தலைவர் சுல்தான் லெப்பை உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற நோக்கத்தை வலியுறுத்தி காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி திட்ட முகாம் நடந்தது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார் சிங் வழிகாட்டுதலின்படி, நகராட்சி தலைவர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சுகு ரெங்கநாதன், கதிரவன், பூங்கொடி, சுயஉதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றனர். இந்த சுகாதாரப் பணியின் போது காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்தவர் வியாகுலம் (வயது 45). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.
வியாகுலம் வழக்கம் போல் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மனைவி சுகந்தி வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறி அவரை மீட்டு காயல்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு வியாகுலம் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சுகந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






