search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free bicycles"

    • தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் ஷிவ்ராஜ் மோகன், முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வமரகதம் வரவேற்றார்.

    இதில் ஐஸ்வர்யம் கம்பி நிறுவனங்களின் சார்பில் 10 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேலாளர் உமயவேல் வழங்கினார். விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உலகின் ஓளி அறக்கட்டளையை சேர்ந்த ஜான்சன் செய்திருந்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் விக்டர் நன்றி கூறினார்.

    • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அதன்பின் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை 120 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப் பாண்டி, நாங்குநேரி வடக்கு வட்டார தலைவர் அம்பு ரோஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், தோட் டாக்குடி ஊராட்சி மன்றம் மேரி ஜெபன்சி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜெயக்குமார், ஜாண்சன், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், ராஜ், முருகன், ராபர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளில் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பழனி ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை ஊராட்சி, பெருமாள்நாயக்கன்வலசு கிராமத்தில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், எரமநாயக்கன்பட்டியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடனாக 63 பயனாளிகளுக்கு தலா ரூ.56,000 கடனுதவி வழங்கினார்.

    தொடர்ந்து ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், தனியார் பங்களிப்புடன் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் என ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் 48 வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பலாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும், கொக்கரக்கண்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.14.15 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அம்பிளிகை ஜேக்கப் நினைவு கிறித்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர், கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திலகவதி, ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர்மன்ற துணைத் தலைவர்வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் மீனா, பழனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்ஈஸ்வரி கருப்புச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்சங்கீதா பழனிச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர்சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரவீந்திரன், தாஹிரா, மாவட்ட கல்வி அலுவலர்(பழனி) பரிமளா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்முத்துசாமி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    சின்னமனூர்:

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதாஅண்ணாதுரை, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தேனி மாவட்ட விவசாயதொழிலாளர் அணிமாவட்டசெயலாளர் செந்தில்குமார், உத்தமபாளையம் வட்டாட்சியர் பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 507 மாணவிகளுக்கு வினியோகம்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

    செய்யாறு:

    செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார்.

    வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை யாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 507 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் கே. விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி, நகர மன்ற துணைத் தலைவர் பேபி ராணி, ஒன்றிய செயலாளர் ஞானவேல், தொண்டர் அணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் முன்னிலையிலும் ஒ.ஜோதி எம்எல்ஏ 371 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    • அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்று பேசினார்.

    இலவச சைக்கிள்கள்

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து 66 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். முன்னதாக அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    விழாவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலர் குழு உறுப்பினர் மஞ்சுளா, தி.மு.க. வட்டச் செயலாளர் கீதா செல்வமாரியப்பன், வார்டு அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் இளங்கோ, பொன்ராஜ், செல்வக்குமார், பொரு ளாளர் பாஸ்கர் மற்றும் சுரேஷ்குமார், இளைஞர் அணி அருணாச்சலம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    இதனைத் தொடர்ந்து காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 253 பேருக்கும், சி.வ. அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 பேருக்கும் என அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 339 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினார்.

    விழாவில் மாநில மீனவர் அணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வடதிசை இந்துநாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் விநாயக மூர்த்தி, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச் செயலாளர் டென்சிங் மற்றும் பாஸ்கர், அல்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • 71 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் களை 18 மாணவர்களுக்கு வழங்கினார்.

    71 மாணவர்கள்

    தொடர்ந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை 71 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறு ப்பாளர் வி.என்.கே. அழகிய நம்பி, திருக்குறுங்குடி பேரூ ராட்சி தலைவர் இசக்கி தாய், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைகண், மறுகால்கு றிச்சி ஊராட்சி தலைவி சாந்தகுமாரி செ ல்லையா, மாவட்ட துணைத் தலைவர் கக்கன், மாவட்ட பொதுச் செய லாளர் நம்பி த்துரை, தி.மு.க. பொதுக்குழு உறு ப்பினர் மாடசாமி, முன்னாள் மாநில பொ துக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட செய ற்குழு உறுப்பினர் சுந்தர், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவி ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், கவுன்சிலர் மீகா, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் ஏ.ஐ.சி.சி. வசந்தா, நெல்லை பாராளு மன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எம். ராஜா, தி.மு.க. செயற் குழு உறுப்பினர் மாய கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், ராம நாதன், வின்சென்ட், தங்க லெட்சுமி, லதா மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, ஜெயக்குமார், காவல்கிளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கேடயம்,பரிசுகள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தின விழா மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 7 அரசு பள்ளிகளுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26 அரசு பள்ளிகளுக்கும் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 5 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் ஊக்க தொகையை வழங்கினார். மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பத்தமடை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனது சொந்த நிதியில் வழங்கினார்.

    பின்னர் மாவட்ட முழுவதும் 109 அரசு பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 918 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தற்போது ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். காமராஜர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தினார். கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது புகழை என்றும் போற்றுவோம். தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் காமராஜரின் புகழை போற்றும் விதமாக பல்கலைக்கழகங்கள், பள்ளிகளுக்கு அவரது பெயரை சூட்டி வருகின்றனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, தி.மு.க மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராசு, மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், நில எடுப்பு டி.ஆர்.ஓ. சுகன்யா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 35 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகிறது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டார், மிகப்பி ற்படுத்தப்பட்டார், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    மேற்படி மக்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்காக பல திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீடானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதமும் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறைநடைமுறையில் உள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலைப்பட்ட படிப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தணையுமின்றி கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் பட்டயபடிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய, பட்டதாரியாகவும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6 -ம் வகுப்பு வரை பயிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ. 500 மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகையானது மாணவி களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 38 விடுதிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 35 விடுதிகள் பள்ளி விடுதிகளாகவும், 3 கல்லூரி விடுதிகளாகவும் செயல்பட்டு வருகிறது.

    இவ்விடுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் வழங்கப்பபடுகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ. 5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிச்செயலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உறவின்முறை தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.

    மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கி ள்களை வழங்கினார். 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நாடார் மேல்நிலை பள்ளி பள்ளிக்குழு கவுரவ தலைவர் ராஜன், உறவின்முறை துணைச்ெசயலாளர் அருஞ்சுனைராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தலைமை,ஆசிரியர் நாகநாதன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர்கள் அன்புச்செல்வன், ரமேஷ், வெற்றிவேல், காசி, அலுவலர்கள் மாரிச்செல்வம், பொன்மணி, பாண்டியராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி தமிழாசிரியை பிரேமலதா தொகுத்து வழங்கினார்.

    ×