search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anitha radhakrishnan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்.
    • அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ராக்கெட் எவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளேட்டில் கொடுக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

     


    அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் சீன ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராக்கெட் ஒன்றின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

    இதற்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தி.மு.க. எந்த பணியையும் மேற்கொள்ளாமல், அதற்கு பெயரை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. அவர்கள் நம் திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர். இஸ்ரோ ஏவுதள திட்டத்தில் அவர்கள் சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்."

    "விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வருவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விண்வெளி துறையில் இந்தியாவின் வெற்றியை உலகிற்கு எடுத்து சொல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நம் விஞ்ஞானிகள் மற்றும் நம் விண்வெளி துறையையே அவமதித்து விட்டனர். அவர்களின் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரம் தி.மு.க.-விற்கு வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.


    முன்னதாக இஸ்ரோவின் பெருமையை கூறும் இடத்தில் சீன ஸ்டிக்கர் இடம்பெற்று இருந்ததற்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். 

    • வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
    • 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்கு சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அவர்களை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.


    தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக 'இந்தியா' கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு,  திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    • ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
    • தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந்தேதி அதீத கனமழை பெய்தது.

    இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

    இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் ஈடுபட்டார். 17-ந்தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியது. மேலும் ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும் தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

    இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.


    அங்கு பொதுமக்களுடன் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பொதுமக்களுடன் நிவாரண உதவிகளை செய்தார். எனினும் கடும் வெள்ளம், தொலை தொடர்பு சேவை பாதிப்பு, சாலை துண்டிப்பு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் இன்று வெள்ளம் ஓரளவு வடிந்ததால் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார் முதல்-அமைச்சர்.
    • அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் விழா ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இணை பேராசிரியர் மோனிக்கா ராம்ராஜ் முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஓன்று. அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து பின்னர் கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு எத்தனை வருடமாக இருந்தாலும் ஓருமுறை பதிவு செய்து விட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துவிடும். முதல்-அமைச்சர் இத்திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்துள்ளார். பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார். கல்வியறிவு இல்லாத மாநிலமாக உருவானால் எல்லா வகையிலும் வளர்ச்சியடையும். கடந்த காலங்களில் கல்லூரி படிப்பை தொடர முடியாத பலரும் இந்த புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்து தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு ரூ. 349 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தில் தொடங்கி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு கல்லூரி படிப்பை தொடர புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி பாரதி கண்ட புதுமைப்பெண் கனவை நிறைவேற்றியுள்ளார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பை தொடரும் நீங்கள் இதில் பயன்பெற்று பயனடைய வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், நாகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சமூகநல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னான்டோ நன்றி கூறினார்.

    • ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
    • வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    தென்திருப்பேரை:

    தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் சார்பில் 63 தொழில் முனைவு பயனாளிகளுக்கு ரூ.25  லட்சம் நுண் தொழில் நிறுவன நிதி கடன் வழங்கப்பட்டது.

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அனைத்து ஊராட்சியிலுள்ள தொழில் முனைவு பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கால்நடை மற்றும் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழில் முனைவு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பொறுப்பு வீரபத்திரன் வட்டார அணித்தலைவர் பாலமுருகன் வட்டார வேளாண் உதவி, இயக்குநர் அல்லிராணி மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் நவீன்குமார், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், தென்திருப்பேரை நகர பொறுப்பாளர் முத்து வீர பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மரகன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், வார்டு உறுப்பினர் ஆனந்த், துணை தலைவர் அமிர்த வல்லி, பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்குத் தெருவை சோ்ந்த ராமசாமி மகனான உப்பள கங்காணி சண்முகராஜ் (வயது 45), ஆவரையூா் அருகே பைக்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, 3 பேரால் வழிமறித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

    இந்நிலையில் இன்று சண்முகராஜ் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

    உடன் தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன்,  ஒன்றிய சேர்மன் ஜனகர்,  பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார்,  கவுன்சிலர் கேசவன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அரசு ரூ. 11.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றதலைவர் பாலசரஸ்வதி, துணைத் தலைவர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி குத்துவிளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களும் திரும்பி பார்க்கின்றனர்.தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. 

    இதனால்மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை பின்பற்றி இங்கு உள்ள திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்படுகின்றனர். அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை உள்ளது. இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார். 

    இதில் தி.மு.க., காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியில் மகத்தான சாதனை படைத்து வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் சாத்தான்குளம் - உடன்குடி இணைப்பு சாலையில் அலங்கார தளக்கல் பதிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    வெங்கட்ராமாமானு ஜபுரம் ஊராட்சி உதிரமாடன்குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம், மற்றும் ரூ.1.25 லட்சத்தில் புதிய சிறுமின்விசை நீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.நேசபுரத்தில் ரூ.4.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

    நிறைவுற்ற இப்பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். மேலும் உதிரமாடன்குடி யிருப்பில் ரூ.11.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம், கந்தபுரத்தில் ரூ. 5.50 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அமைச்சர் நட்டினார். 
    பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்கள் பணி செய்வதில் மகத்தான சாதனை படைத்து வருகிறார். எங்களை  போன்றவர்களிடம்குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நாங்களும் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம், 

    இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் என்றும் ஆதரவாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் பேசினார். 
    இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பாலசரஸ்வதி, துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், உடன் குடி கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியா பத்து ஊராட்சித் தலைவர் பாலமுருகன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ராமஜெயம், ரவிராஜா, இளங்கோ, அலாவுதீன், ஜெயப்பிரகாஷ் உடன்குடி ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பாய்ஸ், அஜய், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், மாவட்ட காங்கிரஸ் கலை, இலக்கியப் பிரிவு தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×