search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா உள்ளனர்.

    புதுமைப்பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார் முதல்-அமைச்சர்.
    • அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க புதுமைப்பெண் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் விழா ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இணை பேராசிரியர் மோனிக்கா ராம்ராஜ் முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஓன்று. அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து பின்னர் கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு எத்தனை வருடமாக இருந்தாலும் ஓருமுறை பதிவு செய்து விட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துவிடும். முதல்-அமைச்சர் இத்திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்துள்ளார். பலருக்கும் கல்லூரி படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி எல்லோரும் கல்விப்படிப்பை தொடர செய்துள்ளார். கல்வியறிவு இல்லாத மாநிலமாக உருவானால் எல்லா வகையிலும் வளர்ச்சியடையும். கடந்த காலங்களில் கல்லூரி படிப்பை தொடர முடியாத பலரும் இந்த புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்து தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு ரூ. 349 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இத்திட்டத்தில் கலந்து கொண்டு நல்லமுறையில் படித்து உங்களுடைய எதிர்காலத்திற்கும், சமுதாயத்திற்கும், முடிவில் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தில் தொடங்கி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு கல்லூரி படிப்பை தொடர புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி பாரதி கண்ட புதுமைப்பெண் கனவை நிறைவேற்றியுள்ளார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பை தொடரும் நீங்கள் இதில் பயன்பெற்று பயனடைய வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், நாகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சமூகநல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னான்டோ நன்றி கூறினார்.

    Next Story
    ×