search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலை சேலம் மாவட்டத்தில் காலையில் வெயில் அடித்தது மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது.

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர், கெங்கவல்லி, ஓமலூர் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மாநகரத்தில் தெருக்களில் மழை நீரும் சாக்கடையும் பெருக்கெடுத்து ஒடியது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூர் - 16மி.மீ, தலைவாசலில்- 12, பெத்தநாயக்கன் பாளையம்-11, சேலம் - 10.7, ஏற்காடு - 7, தம்மம்பட்டி - 5, ஓமலூர் - 4.6, கெங்கவல்லி - 4, சங்ககிரி - 4, மேட்டூர்- 2.2, கரிய கோவில் - 2, ஆத்தூர் - 1.2, எடப்பாடி - 1 என மாவட்டம் முழுவதும் 80.70 மி.மீ. மழை பெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
    • இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார்.

    சேலம் மாவட்டத்தின் மைய பகுதியில் வீரபத்திரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் காட்சி தருகின்றனர். பத்திரகாளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை அமைந்துள்ளன.

    சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதி உலா செல்கிறார்.

    பொதுவாக வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கு இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம். பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீர பத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.

    மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தனிச்சன்னிதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'ஜங்கமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.

    ஐப்பசி பவுர்ணமியில் ஐங்கமேஸ்வரருக்கு அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண். பெண் இருபாலருக்கும் பிரசாதமாக தருவர். ஆனால் இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

    நவக்கிரக சன்னிதி எதிரில், ராஜ கணபதி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் 'அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

    அம்பாள் வேதநாயகி, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னிதிகளும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளன. சிவன் சன்னிதி எதிரே மேல் விதானத்தில் 12 ராசி களுடன் கூடியராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

    சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விநாயகர் மற்றும் சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கின்றனர்.

    இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

    சேலம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
    • கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

     பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரு வுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்தி டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
    • நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    சேலம்:

    சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .

    இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes, 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
    • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.

    கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.

    அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram