என் மலர்
நீங்கள் தேடியது "Salem"
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க கோவில் நிர்வாகம் புனரமைத்தது.
இந்நிலையில், சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
- கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-வது முறையாக இன்று காலை நிரம்பியது. அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அணை 6-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டம் செல்கிறார்.
மாலை மேட்டூர் செல்லும் அவர் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
சேலம்:
சேலம் மாநகராட்சி அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றுவது, வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில் வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளன .ஆனால் எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதனால் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுஹாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியை கையால் தாக்கினார். தொடர்ந்து கன்னத்திலும் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து யாதவ மூர்த்தியை தி.மு.க. கவுன்சிலர் முருகனும் பிடித்து தள்ளினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் தி.மு.க. கவுன்சிலர் சுகாசினியை தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதற்கு இடையே கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து யாதவமூர்த்தி கூறுகையில், ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறோம். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். இந்த நிலையில் 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
இதனால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு மிரட்டல் வந்தபோது சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.
இதே போல ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது.
ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழையாக கொட்டியது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மக்கள் கருதிய நிலையில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 46.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 0.7, ஏற்காடு 8.6, ஆனைமடுவு 1, ஆத்தூர் 7, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 1, மேட்டூர் 14 மி.மீ., டேனீஸ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






