என் மலர்
நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவிகள்"
- நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
- மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டின் உலக மீன்வள தினம் "கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்" ('Strengthening the value addition in Seafood exports)' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நந்தனத்தில் அனமந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துனற இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துனற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்று, மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துனறமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் (TNFDC) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள் / இடு பொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
- விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
73 ஆயிரம் பேருக்கு இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. குறுகிய காலத்தில் இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக மாவட்ட மாநாடு போல ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுகிறேன்.
ராஜாக்கள் பெயரில் அதிக அளவில் ஊர்கள் உள்ளன. ராணிகள் பெயரில் சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது ராணிப்பேட்டை.
அதனால்தான் ராணிப்பேட்டையில் நடைபெறும் இந்த விழாவில் ராணிகளுக்கு அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற 73 ஆயிரம் பேரில் 55 ஆயிரம் பேர் பெண்கள்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 4½ ஆண்டுகளில் 820 கோடி பயணங்கள் இதன் மூலம் மகளிர் சென்றுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ.900 முதல் ஆயிரம் வரை சேமிக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசின் மிகப்பெரிய வெற்றி. அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் பசியுடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
இதன் மூலம் தரமான உணவு, கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் தினமும் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன.
கடன் சுமை, நிதிச் சுமை இருந்தாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த அறிவிப்பை நான் தான் சட்டசபையில் வெளியிட்டேன்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாநிலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.
மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பஸ்களில் சுமார் 25 கிலோ எடை வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
எனவே மகளிர் குழுவினர் உங்களுடைய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12,000 பேருக்கு பட்டா கிடைக்கப் பெற்றுள்ளது.
பட்டா கேட்டு அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்ற நிலைமை மாறி அரசு தேடி வந்து பட்டா வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
விளையாட்டில் ஈடுபடுங்கள் உங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல திராவிட மாடல் அரசுக்கும் முதலமைச்சருக்கும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அம்பேத்குமார் எம்.எல்.ஏ.வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பெருங்கடப்புத்தூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மனுநீதி நாள் விழா நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அனாமிகா, தெள்ளார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி, வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பெருங்கடப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ஆதிகேசவன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம். எல். ஏ, கலந்துகொண்டு 418 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
விழாவில் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சுரேஷ்குமார், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன் பாபு,பரணிதரன், தேசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, சுகாதார ஆய்வாளர் கணேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சுகாதா ரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை பார்வையிட்டனர்.
- விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
- முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27-ந்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 52 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முகாமிற்கு சங்கரன்கோவில் சப் -கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், முதி யோர் உதவி தொகை 14 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 6 பேருக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு சங்கரன்கோவில் சப்-கலெக்டர் சுப்புலட்சுமி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக தலா 50 பனை விதைகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கவாத்து செய்யும் கருவியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணைத் தாசில்தார் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் திட்ட பிரிவு ஆணையாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர வடிவு, தேவி சத்யா, வேளாண்மை அலுவலர் கவுசல்யா, உதவி அலுவலர் கிருஷ்ண சங்கீதா, தோட்டக்கலைத்துறை சார்பாக உதவி இயக்குனர் ராஜா, விவேகானந்தன், முனீஸ்வரன், குணா, ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், கிப்சன், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சாயல்குடி அருகே 178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ். கீரந்தை ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பரமக்குடி சார் ஆட்சியர் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவன், பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பிரதாப்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் விசுபாவதி, தோட்டக்கலை துறை இயக்குனர் நாகராஜன், கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, தமிழ் மதி கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜ், சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மாரி ப்பாண்டியன், நவீன் குமார், அருண்குமார், ஜமால் முகம்மது உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா நடந்தது.
- இதில் 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-
விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் தான் இந்த அரசின் நோக்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்ட ங்களை செய்து வருகிறார்.
மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளன. வைகை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலை வசதி, குடிநீர்வசதி இவை அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பாலகொலா விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 81 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
81 பேருக்கு வீட்டு மனைப்பட்டா நீலகிரியில் அனுபோக சான்று ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் நலன் கருதி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு திட்டம் மூலம் பட்டா வழங்கப்படுகிறது. பாலகொலாவில் மட்டும் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை சார்ந்த மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 81 பேருக்கு ரூ.56.70 லட்சம் செலவில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 பேருக்கு ரூ.37.72 லட்சம் கடனுதவிகள் உள்பட மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் மகாவீர் சித்ரன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் பாலகொலா ஊராட்சி தலைவர் கலைசெல்வி , ஊராட்சி செயலர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- திருப்பத்தூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.30.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினா்.
கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:-
இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளுவா் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளா்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்த்தில் 2022-23 ஆண்டில் 2022 முடிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்கடன் உள்பட மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 139 பேருக்கு ரூ.955.67 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளா்களுக்கும் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்கிடவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வங்கி ஆகியவைகளில் பணியா ற்றும் அனைத்து நிலைகளை சார்ந்தோர்களுக்கும் தனி நிதியம் உருவாக்கி, அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், கூட்டுறவே நாட்டுயா்வு என்ற அடிப்ப டையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் துறையாக திகழ்ந்து வருகிறது என்றார்.
விழாவில் 3 ஆயிரத்து 586 பயனாளிகளுக்கு ரூ.30கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதில் கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தலைவா் சேங்கைமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், திருப்பத்தூர்பேரூராட்சி தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூர்ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் 51- வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அ.தி.மு.க.வின் நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் எம்.எல்.ஏ., காவேரிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார். அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஹரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
- சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.
தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு
சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில் விசை உழுவை எந்திரம்
- (Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள்
நாகர்கோவில்,:
தோவாளை சகாய நகர் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதி வுத்துறை அரசு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்க லைத்துறையின் சார்பில் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜோதி நிர்மலாசாமி பேசிய தாவது:-
சகாயநகர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலை ஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானி யத்தில் விசை உழுவை எந்திரத்தினையும், தோவாளை வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.21 லட்சம் மதிப்பில் விசை உழுவை எந்திரத்தினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.1,500 மதிப்பிலான கைத்தெளிப்பான் 50 சதவீதம் மானியத்திலும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான் சதவீதம் மானியத்தில் ஒரு 50 வழங்கப்பட்டதோடு, 3 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங் கப்பட்டது.
மேலும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.500 மதிப்பிலான மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு (Head Light). ரூ.7,500 மதிப்பிலான நெகிழி கூடைகள்
(Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளி களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தோவாளை ஊராட்சி ஒன்றி யம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பழுத டைந்த வீடுகளை சரி செய் யும் பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு பணி களை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விசுவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவல கத்தினை ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குநர் ஹனி ஜாய் சுஜாதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசா யம்) வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜோஸ், விவசாய பெருமக்கள் உட்பட துறைசார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டார்கள்.
- மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






