search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
    X

    சாயல்குடி அருகே எஸ் கீரந்தை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பரமக்குடி சார் ஆட்சியர் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

    • சாயல்குடி அருகே 178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ். கீரந்தை ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பரமக்குடி சார் ஆட்சியர் வழங்கினார்.

    இம்முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவன், பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பிரதாப்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் விசுபாவதி, தோட்டக்கலை துறை இயக்குனர் நாகராஜன், கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, தமிழ் மதி கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜ், சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மாரி ப்பாண்டியன், நவீன் குமார், அருண்குமார், ஜமால் முகம்மது உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×