என் மலர்
நீங்கள் தேடியது "சிவகிரி"
- ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.
பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.
கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வரும் 20ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 3 நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் 3 நபர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவலும் தெரிய வரும் என்றனர்.
மேலும் பிடிபட்ட 3 பேரிடம் பல்லடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த கொலை வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
- வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
சிவகிரி:
சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.
தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.
தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
- முத்துக்குமாரசாமி சப்பரத்தில் எழுந்தருளிபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. கந்த சஷ்டியை முன்னிட்டு மூலவர்க்கு காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள், தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
6-ம் திருநாளான 30 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 31-ந் தேதி (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஊஞ்சல் காட்சியும், 2 -ந் தேதி (புதன்கிழமை) பள்ளியறை நிகழ்ச்சியும், 3 -ந் தேதி (வியாழக்கிழமை) ஊஞ்சல் காட்சியும், 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தளத்து கோவிலில் வைத்து மகுடாபிஷேகம் விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
- முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27-ந்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 52 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 29 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முகாமிற்கு சங்கரன்கோவில் சப் -கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், முதி யோர் உதவி தொகை 14 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 6 பேருக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு சங்கரன்கோவில் சப்-கலெக்டர் சுப்புலட்சுமி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக தலா 50 பனை விதைகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கவாத்து செய்யும் கருவியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணைத் தாசில்தார் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் திட்ட பிரிவு ஆணையாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா, விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர வடிவு, தேவி சத்யா, வேளாண்மை அலுவலர் கவுசல்யா, உதவி அலுவலர் கிருஷ்ண சங்கீதா, தோட்டக்கலைத்துறை சார்பாக உதவி இயக்குனர் ராஜா, விவேகானந்தன், முனீஸ்வரன், குணா, ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், கிப்சன், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
- இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.
ஈரோடு:
கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப் புதூர், குப்பம் பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல் பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், சோளக்காளி பாளையம், நாகமநாய்க்கன் பாளையம்.
சிவகிரி, வேட்டுவபாளை யம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழ மங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங் காட்டு வலசு, எலலக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாைளயம், பாரப்பாளை யம், விளக்கேத்தி, குட்டப் பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுக பட்டி, 24 வேலம் பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தை யன் வலசு, கருக்கம் பாளை யம், ஊஞ்சலூர், ஒததக்கடை, வடக்கு புதுப்பாளையம்.
ஈஞ்சம்பள்ளி, முத்து கவுண்டன் பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ராக்கியா பாளையம், மடத்துப்பாளையம், கணபதி பாளையம், பச்சாம் பாளை யம், பழனி கவுண்டன்பாளை யம், பஞ்சலிங்க புரம், காங்கேயம் பாளையம், சாானார் பாளையம், குமரன் பாளையம்.
நடுப்பாளையம், தாமரை பாளையம் மலையம் பாளை யம், கொம்பனை புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம் பள்ளி, கொளாநல்லி, கரு மாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்து பாளையம், செம் மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.
பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப் பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.
- சிவகிரி சுற்றியுள்ள பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு முகாம்களில் மாணவர்கள் ஈடுபட்டனர்,
- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.
சிவகிரி:
சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேனைத் தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத் தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பி னர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி பகுதியில் 24 மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாம்களில் நடக்கும் பணிகளையும், வாக்குசாவடி முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளையும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளருமான செண்பகவிநாயகம் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறப்பு, இரட்டை பதிவுகள், இடம் மாறியவர்கள் விபரம் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் அவைத்தலைவர் துரைராஜ், வாக்கு சாவடி முகவர்கள் வீரமணி, ரூபன் குமார், கணேசன், பிச்சை மணி, மாரித்துரை, ராமசந்திரன், இளையராஜா, மதுரை வீரன், வீரபாண்டியன், திருமலைக்குமாரசாமி, அனந்தபிள்ளை, கவுன்சிலர்கள் கிருஷ்ணலீலா, முத்துலெட்சுமி தங்கராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நோயாளிகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
- சிவகிரி 18-வது வார்டு தருமபுரி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
சிவகிரி:
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிவகிரியில் வாசுதேவ நல்லூர் ஒன்றிய தி.மு.க., சிவகிரி பேரூர் தி.மு.க., உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால், பழம், பிஸ்கட், பிரட் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
பேரூர் தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் கட்சி கொடியேற்றி லட்டு வழங்கப்பட்டது. ஒன்றிய தி.மு.க. சார்பில் சிவகிரி பேரூராட்சி 18-வது வார்டு தருமபுரி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான கந்தவேல், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருதப்பன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், விவசாய தொழிலாளர் அணி பூமிநாதன், தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவர் மருதுபாண்டியன், இயக்குனர் மாரித்துரை, சிவகிரி நிர்வாகிகள் துரைராசு, முனியாண்டி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், இருளப்பன், விக்னேஷ், முத்துலட்சுமி, கிருஷ்ண லீலா மற்றும் சி.எஸ்.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் நேற்று முன்தினம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் தலைமையில் 250 - க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்முத்தையா பாண்டியன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் கிளைசெயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மணிகண்டன் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
- போலீசார் செல்வராஜை கைது செய்து அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி தர்மாபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவர் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மது, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ்(63) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரை கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர். நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை வழங்காமல் வெகு நாட்களாக காலம் தாழ்த்தியும், ஆலையை நடத்தாமல் மூடியதாலும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராத நிலையில் நீண்ட காலமாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.
ஆகவே அரசு உடனே தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிவகிரி அருகே உள்ள ஆலையையும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆலையையும் உடனே திறப்பதற்கும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேலு, சிவகிரி நகர கிளைச்செயலாளர் ரவிந்திரநாத் பாரதி, வாசுதேவநல்லூர் சுப்பையா, மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






