என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.

    பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.

    கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வரும் 20ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 3 நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் 3 நபர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவலும் தெரிய வரும் என்றனர்.

    மேலும் பிடிபட்ட 3 பேரிடம் பல்லடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் இந்த கொலை வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    • வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.

    தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.

    தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.

    வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் ஆதார் தொடர்பான பிரச்னைகளுக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் பெரும்பாலானவை தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தங்களுடைய சொந்த வேலைகளை செய்யமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    சிவகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி திருத்தம், புகைப்பட மாற்றம், போன் எண் இணைக்க, கருவிழி, ரேகை பதிவு என பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப கோளாறு (தரவு/செயல்முறை) என நிராகரிக்கப்படுகிறது.

    ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய முடியாமலும், புதிய ஆதார் அட்டை எடுக்க விவரம் தெரியாத ஏழை, எளிய, வயதான பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.

    சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விபரம் தெரியாத பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் எப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மக்களுக்கும் எவ்வித தங்குதடையின்றி சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிவகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர் ஜவஹர்லால் நேரு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
    • வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    சிவகிரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு தாம்பூல தட்டு, டிபன் பாக்ஸ் ஆகிய பொருட்களை சொந்த செலவில் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் சாந்தி சரவணபாய் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் பற்றியும், எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவு முறைகள் பற்றியும், தாயும் சேயும் நலமுடன் இருக்கக் கூடிய மருத்துவ முறைகளையும் எடுத்து கூறினார். வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அவர்களுக்கு வளைகாப்பு பொருட்கள், தாம்பூல தட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம் ஆகிய 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஊராட்சியை பசுமை ஆக்கும் நோக்கில் ஊராட்சி மன்ற வளாகத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.


    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பி னர்கள் நாச்சியார், சுப்பிர மணியத்தாய், இசக்கித் துரை, பேச்சியம்மாள், ஊராட்சி செயலர் பொறுப்பு சண்முகையா, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி ஊராட்சி பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக நெற்களம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விஸ்வை ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், வாசு ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், கிளை செயலாளர் ராமமூர்த்தி, குருநாதன், காஜாமைதீன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, கோவில் சப்பர உலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருவிழா மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் ரகுபதி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி தேவர் சிலை அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் ரகுபதி சிவகிரியில் உள்ள தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ராயகிரி செயலாளர் குருசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராயகிரி விவேகானந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப் புதூர், குப்பம் பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல் பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், சோளக்காளி பாளையம், நாகமநாய்க்கன் பாளையம்.

    சிவகிரி, வேட்டுவபாளை யம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழ மங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங் காட்டு வலசு, எலலக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாைளயம், பாரப்பாளை யம், விளக்கேத்தி, குட்டப் பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுக பட்டி, 24 வேலம் பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தை யன் வலசு, கருக்கம் பாளை யம், ஊஞ்சலூர், ஒததக்கடை, வடக்கு புதுப்பாளையம்.

    ஈஞ்சம்பள்ளி, முத்து கவுண்டன் பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ராக்கியா பாளையம், மடத்துப்பாளையம், கணபதி பாளையம், பச்சாம் பாளை யம், பழனி கவுண்டன்பாளை யம், பஞ்சலிங்க புரம், காங்கேயம் பாளையம், சாானார் பாளையம், குமரன் பாளையம்.

    நடுப்பாளையம், தாமரை பாளையம் மலையம் பாளை யம், கொம்பனை புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம் பள்ளி, கொளாநல்லி, கரு மாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்து பாளையம், செம் மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

    பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப் பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தேவிபட்டணம் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
    • வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார், தேவிபட்டணம் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளை செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ராமர், உள்ளார் மணிகண்டன், விக்கி, அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு மருத்துவ பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம் ராயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராயகிரி இந்து நாடார் உறவின்முறை சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், ராயகிரி பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா, துணைத்தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா, மருத்துவ அலுவலர் கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்டகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்களுக்கான மருத்துவம் பெட்டி வழங்கினர்.

    முன்னதாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் பள்ளியின் சார்பாக அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சிறப்பு மருத்துவம், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உட்பட்ட அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், செயலர் சண்முகானந்தம், சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி கமிட்டி செயலர் கணேசன், தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர்கள் நாராயணன், நாகராஜ், பாபு, இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், ம.தி.மு.க. கிருஷ்ணகுமார், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், விவேகானந்தன், பேரூர் செயலாளர் குருசாமி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், ராஜகுரு, வார்டு கவுன்சிலர்கள், மணிகண்டன், விக்கி, வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலகம் சார்பில் அனைத்து மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் செய்திருந்தார்.

    ×