search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balasubramaniya Swamy Temple"

    • பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
    • 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிர மணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி கடந்த மாதம் 26 -ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் திருவிழா கொண்டா டப்பட்டது. நேற்று 9 -வது திருநாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவகிரி ஜமீன் தார் சேவுகப்பாண்டி யன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் தேரடி முனியாண்டி கோவில் அருகே தேரின் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையத்திற்கு வந்தது.

    இதில் பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், அனைத்து சமுதாய பொறுப்பாளர்கள், டாக்டர் செண்பகவிநாயகம், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று பங்குனி உத்திரத்தை யொட்டி தெப்பத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.

    • காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சி நடந்தது.
    • இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரம் தேரோட்டம், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிவகிரி சேனைத்தலைவர் சமூகத்தினரால் 6-ம் திருநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    காலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர்ந்து வலம் வரும் காட்சியும், காலை 11 மணியளவில் 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு பகுதியில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சேனைத்தலைவர் சமுதாய மகாசபை மண்டபத்திலும், திருமண மண்டபத்திலும் 526 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கணபதி சுந்தர குருக்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடியும், மந்திரங்கள் ஓதியும் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்குகளை ஏற்றிவைத்து பக்தி பாடல்கள் பாடினர்.

    விளக்கு பூஜைக்கு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைஞர் மூக்கையா, செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் நடத்தினர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இரவு 10 மணிக்கு மேல் தீபாராதனை காட்சியும், முத்துக்குமாரசாமி மயில் வாகனத்திலும், மீனாட்சியம்மன் காமதேனு வாகனத்திலும் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    • கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, கோவில் சப்பர உலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருவிழா மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×