என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadhar service"
- கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.
சிவகிரி:
சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் ஆதார் தொடர்பான பிரச்னைகளுக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2 வாரமாக அந்த மையம் மூலமாக பெறப்படும் சேவைகள் பெரும்பாலானவை தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தங்களுடைய சொந்த வேலைகளை செய்யமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சிவகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி திருத்தம், புகைப்பட மாற்றம், போன் எண் இணைக்க, கருவிழி, ரேகை பதிவு என பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப கோளாறு (தரவு/செயல்முறை) என நிராகரிக்கப்படுகிறது.
ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய முடியாமலும், புதிய ஆதார் அட்டை எடுக்க விவரம் தெரியாத ஏழை, எளிய, வயதான பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.
சரியான ஆவணங்கள் கொடுத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிராகரிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விபரம் தெரியாத பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் எப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மக்களுக்கும் எவ்வித தங்குதடையின்றி சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிவகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர் ஜவஹர்லால் நேரு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்