search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ragupathi"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • 10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் தொடர்பு பற்றியும் கவர்னரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன்படி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

    இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். பின்னர் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த பட்டியல் அடங்கிய புகார் மனுவை அளித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சி.வி.சண்முகம் போதைப்பொருட்களின் நடமாட்டம் பற்றியும், டெல்லியில் கைதான ஜாபர் சாதிக் பற்றியும் விளக்கி கூறினார்.

    கவர்னரை சந்தித்து விட்டு வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

    3 ஆண்டுகளில் அவர் 45 முறை போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


    ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய சினிமா படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து உள்ளார். முதலமைச்சர், உதயநிதியை சந்தித்து நிதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரி கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

    இப்படி போதைப்பொருள் மூலமாக சம்பாதித்த பணத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    கே:- போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறாரே?

    ப:- போதைப்பொருள் கடத்தலில் இருந்து மக்களை திசை திருப்ப தி.மு.க.வினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள்.

    10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி அதிகாரிகள் வெளியில் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது குற்றமில்லை. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படுகிறார்கள். போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க.வினர் நடுங்கிப் போய் உள்ளனர். பதற்றத்தில் இருக்கிறார்கள். தவறு செய்யவில்லை நாங்கள் நிரபராதி என்றால் சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. செய்யும் அரசியல் எடுபடாது.

    * வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது.

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வும் கைகோர்த்து செயல்படுகிறது.

    * தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம்.

    * குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    * தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

    * தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடனே ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    • உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம்.
    • தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

    சென்னை:

    சட்டமன்ற பேரவையில் இன்று கவர்னர் உரை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.

    கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் கவர்னர், கவர்னர் உரையிலிருந்து பேசாமல் தனது சொந்த சில கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய கவர்னர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் இன்று அவர் பதிலளித்திருக்கிறார். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் கவர்னருக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

    தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது.

    விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் கவர்னர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்து, தனக்கு ஏற்றாற்போல அவர் படித்திருக்கின்றார்.

    தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். கவர்னர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம்.



    ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கவர்னர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

    தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற கவர்னர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், சபாநாயகர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், சபாநாயகர் பேசும்போது, திடீரென்று கவர்னர் எழுந்து சென்று விட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவற விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட கவர்னர் கூறவில்லை.
    • தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என கவர்னர் நினைக்கிறார்.

    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து விட்டாரா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிறதே?

    அமைச்சர் ரகுபதி பதில்:- அந்த 10 சட்ட மசோதாக்களை நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். அதை திருப்பி அனுப்புவதற்கு முன்பு கவர்னர் இன்னென்ன காரணங்களுக்காக நான் திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருப்பாரேயானால், அதற்கான தகுந்த விளக்கங்களை நாங்கள் தந்து, அந்த மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பி இருப்போம்.

    ஆனால் அப்போது காரணம் தெரிவிக்காமல் 'சும்மா' அனுப்பி விட்டு இப்போது நாங்கள் மீண்டும் சட்டமன்றத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன், தான் ஒப்புதல் தர வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்ற நிலையிலே, அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக இன்றைக்கு உள்துறை அமைச்சகத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- இந்த விசயத்தில் அவர் தொடர்ந்து காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கிறீர்களா?

    பதில்:- தன்னிடம் இருக்கக் கூடிய அதிகாரம் பறி போகக்கூடாது என்ற எண்ணம் ஏன் அவருக்கு வருகிறது என்று தெரியவில்லை.

    ஒரு மாநில அரசுக்கு ஒரு துணை வேந்தரை நியமிக்க கூட அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமான ஒன்று என்று புரியவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறோம். அந்த குழுவில் கவர்னரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டி கேட் பிரதிநிதியும் அதில் உள்ளார்.

    அந்த தேடுதல் குழுதான் மூன்று பேரையும் பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கவர்னர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது?

    மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அவருக்கு 2-வது முறையாக அனுப்பி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
    • அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் ரகுபதி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான சிவகிரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் ரகுபதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி தேவர் சிலை அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் செயலாளர் செண்பக விநாயகம், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் ரகுபதி சிவகிரியில் உள்ள தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ராயகிரி செயலாளர் குருசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராயகிரி விவேகானந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
    • இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பாளை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சிறையில் உள்ள கைதிகள் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,378 பேர் உள்ளனர். ஆனால் இங்கு 1,332 கைதிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. எனவே கூடுதலாகத்தான் கைதிகள் இருக்கிறார்கள்.

    எனினும் அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா? போதிய மருத்துவ வசதிகள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

    இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் சிறைச்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. இங்கு தான் சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

    புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியாக ஒரு அமர்வு நீதிமன்றம் வேண்டும். அதன்படி தென்காசி மாவட்டத்துக்கும் தனியாக ஒரு மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம்.

    உயர்நீதிமன்றத்தில் கருத்துரு பெற்று விரைவில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த 3 வருடங்களாக சிவில் நீதிபதிகள் தேர்வு நடைபெறாமல் உள்ளது. நீதிபதிகள் காலி பணியிடம் என்பதை பொறுத்தவரை, உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட ஒரு நியமன குழு உள்ளது. அவர்கள் தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்வார்கள். அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும்.

    மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல் என்று புகார்கள் கூறப்படுகிறது. ஆனால் அங்கு அந்த அளவுக்கு வருவாய் இல்லை. இருந்த போதும் அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பழைய சிறைச் சாலைகளை புதுப்பிக்க இரட்டிப்பு செலவாகும் என்பதால் புதிதாகவே கட்டலாம் எனவும், அதற்கான இடத்தை வருவாய் துறையினர் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக அதற்கான பணிகளை தொடங்கலாம் எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    பாளை மத்திய சிறையை பொறுத்தவரை புதுப்பிக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி செலவாகும். அதற்கு பதிலாக புதிதாக சிறைச்சாலை கட்ட வருவாய் துறையினர் இடம் தேர்வு செய்து கொடுத்தால் புதிதாக சிறைச்சாலை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கைதிகளின் திறமைக்கேற்ப வேலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறைச்சாலைகளில் 2-ம் நிலை காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாளை சிறைச்சாலையில் கலைஞர் சிறை வைக்கப்பட்ட அறை உள்ளது. இது தி.மு.க.வினருக்கு கோவில் போன்றது.

    தி.மு.க. நூற்றாண்டு விழாவையொட்டி அவர் இருந்த அறையில் அடையாள சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பாக அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளது.

    ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
    • தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள், இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.

    அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும், இந்த ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்து வருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

    அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பெயரிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிகார பலத்தை வைத்து அவர்கள் எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம், ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைத்து கூட அவர்களால் பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×