என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி விளக்கம்
    X

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி விளக்கம்

    • கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
    • தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை என்றார்.

    சென்னை:

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.

    தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை.

    தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

    2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.

    2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×