search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கவர்னர் எடுத்த முடிவு: அமைச்சர் ரகுபதி புகார்
    X

    வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கவர்னர் எடுத்த முடிவு: அமைச்சர் ரகுபதி புகார்

    • மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட கவர்னர் கூறவில்லை.
    • தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என கவர்னர் நினைக்கிறார்.

    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து விட்டாரா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிறதே?

    அமைச்சர் ரகுபதி பதில்:- அந்த 10 சட்ட மசோதாக்களை நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். அதை திருப்பி அனுப்புவதற்கு முன்பு கவர்னர் இன்னென்ன காரணங்களுக்காக நான் திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருப்பாரேயானால், அதற்கான தகுந்த விளக்கங்களை நாங்கள் தந்து, அந்த மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பி இருப்போம்.

    ஆனால் அப்போது காரணம் தெரிவிக்காமல் 'சும்மா' அனுப்பி விட்டு இப்போது நாங்கள் மீண்டும் சட்டமன்றத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன், தான் ஒப்புதல் தர வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்ற நிலையிலே, அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக இன்றைக்கு உள்துறை அமைச்சகத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- இந்த விசயத்தில் அவர் தொடர்ந்து காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கிறீர்களா?

    பதில்:- தன்னிடம் இருக்கக் கூடிய அதிகாரம் பறி போகக்கூடாது என்ற எண்ணம் ஏன் அவருக்கு வருகிறது என்று தெரியவில்லை.

    ஒரு மாநில அரசுக்கு ஒரு துணை வேந்தரை நியமிக்க கூட அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமான ஒன்று என்று புரியவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறோம். அந்த குழுவில் கவர்னரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டி கேட் பிரதிநிதியும் அதில் உள்ளார்.

    அந்த தேடுதல் குழுதான் மூன்று பேரையும் பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கவர்னர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது?

    மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அவருக்கு 2-வது முறையாக அனுப்பி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×