கள்ளச்சாராய வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு- அமைச்சர் ரகுபதி

கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.
கள்ளச்சாராய வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு- அமைச்சர் ரகுபதி
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.

2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். முதலமைச்சரை பொருத்தமட்டில் மது விலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூட்டணி கட்சிக்கு வருபவர்கள் சீட்டுகளையும் கேட்கிறார்கள், பணத்தையும் கேட்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com