search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  சமுதாய வளைகாப்பு விழா
    X

    வளைகாப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்

    சிவகிரியில் சமுதாய வளைகாப்பு விழா

    • சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
    • வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    சிவகிரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு தாம்பூல தட்டு, டிபன் பாக்ஸ் ஆகிய பொருட்களை சொந்த செலவில் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் சாந்தி சரவணபாய் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் பற்றியும், எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவு முறைகள் பற்றியும், தாயும் சேயும் நலமுடன் இருக்கக் கூடிய மருத்துவ முறைகளையும் எடுத்து கூறினார். வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அவர்களுக்கு வளைகாப்பு பொருட்கள், தாம்பூல தட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம் ஆகிய 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×