என் மலர்
நீங்கள் தேடியது "Public Relations Camp"
- பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.
- 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரடிவாவி ரங்கசாமிகவுண்டர் மண்டபத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். விழாவில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுயஉதவிக்குழுக்கள் குறைவாக உள்ளதால், மேலும், சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும். அந்த வகையில் கரடிவாவியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 11 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 250 மதிப்பில் கணினி புதிய குடும்ப மின்னணு அட்டை, 20 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 207 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 452 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் சார்பில், 3 பேருக்கு ரூ.75 ஆயரம் மதிப்பிலும், இலங்கை தமிழர் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.90 ஆயிரத்து 570 மதிப்பில் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மயிலாடுதுறை திருவாவடுதுறை கிராம ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் திருவாவடுதுறை கிராம ஊராட்சி, நடராஜ சுந்தராம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் கலந்து கொண்டு 165 பயனாளிகளுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் என்பது தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மனுநீதி நாள் முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டங்களை கவனித்து பயனடையவும், மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும், இத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் இத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.
இங்கு பயனாளிகளுக்கு உதவிகள் கொடுத்திட மட்டுமல்லாமல் பொது மக்களாகிய உங்களின் உரிமைகளை எங்களிடம் கேட்டு நலத்திட்டம் பெற வேண்டும் என்பதனை உங்களுக்கு உணர்த்திடவும் வந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
மக்கள் தொடர்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டு 94 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்க ப்பட உள்ளன. மீதமுள்ள 43 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்யு ரேகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சக்கந்தி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:-
சிவகங்கை வட்டம் சக்கந்தி கிராமத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். சக்கந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
- ஊராட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.
தேனி:
தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் ஊராட்சி க்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்த தாவது:-
தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்கள் ஒருவரும் இருக்ககூடாது. மேலும், மாணவ, மாணவி யர்களை தேர்வு எழுதுவற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி னாலும் கூட பெற்றோர்க ளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
ரேசன் கடைகளின் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்ட ப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசி யினை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரா ட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.
தற்போது, கொரோனா நோய்த் தொற்று மாவ ட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. காயச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகள் அறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் 218 பயனாளிகளுக்கு இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
- விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிலக்கோட்டை தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெற நிலக்கோட்டை தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலக்கோட்டை,ஏப்.18-
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை,ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 19 -ந்தேதி நிலக்கோட்டை ஹெச்-என்.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மங்கள் பகவான் மண்டபத்தில்நடைபெறஉள்ளது. வத்தலகுண்டு ஒன்றியத்திற்குவருகின்ற 20-ந்தேதி வத்தலகுண்டு பேரூராட்சி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க இருக்கிறது.இம்முகாமில்மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளுக்கும் மனுக்கள் பெற உள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறநிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
- உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் உள்வட்டம் பண்ணைப்புரம் வருவாய் கிராமம் உட்கடை மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.
மானாமதுரை
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.