search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Scheme Assistance"

    • கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
    • கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார்.

    சேலம்:

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1996-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை

    முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு 600-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் வங்கிகளுக்கும், 12,500 நியாய விலைக் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.20,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கிகளில் இருந்து 9 சதவீதத்திற்குக் கடனாகப் பெற்று, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1,500 வங்கிகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் 126 நகர வங்கிகளும், 70 நில வள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உள்ளூரில் உள்ள செயலாளர் மூலம் உறுதி செய்தவுடன் கடன் வழங்கப்படுவதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. விவசாயிகள், சிறுவியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது.

    இக்கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் வாயிலாக பயிர்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், மத்தியக் காலக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், மகளிர் சிறுவணிகக்கடன் மற்றும் வீடு அடமானக்கடன் என 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய 39 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்ய நீலம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மீராபாய், சரக துணைப் பதிவாளர் முத்து விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த 70-வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட் பட்ட தனியார் மகாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவ தற்கென நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள் மட்டு மன்றி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கள் துவங்கி பயன்பெறும் வகையில், கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்ற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கட னுதவியும், 7,853 உறுப்பி னர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 2,47, 920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட் டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 4,18,657 நபர் களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

    2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை யும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காப் பீட்டு தொகைக்கான காசோ லையினையும் என மொத் தம் 3,171 பயனாளிகளுக்கு ரூ.34,88,51,260 மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது என் றார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. ஜூனு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், துணை பதி வாளர்கள் பாலசந்தர், நாக ராஜன், குழந்தைவேல், ஸ்ரீமான், பாரதி, சேதுராமன், குமரன், காஞ்சிரங்கால்

    ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) மாரிச்சாமி, நுகர்பொ ருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர்கள் பொன் னையா, சரவணன், சிவ கங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) பொ.சக்திவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப் பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    காளையார்கோவில்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே தி.மு.க. பொற்கிழி-நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள சேடப்பட்டியார் திடலில் நாளை (21-ந்தேதி) காலை முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலா மாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழா நடைபெற உள்ளது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சிறப்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். விழா முடிவில் கட்சியினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இதனிடையே முத்தப்பன்பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு தோரணங்கள், வாகனங்களை நிறுத்த இடவசதி உள் ளிட்ட ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    இந்த இறுதிகட்ட ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட செய லாளர் சேடபட்டி மு.மணிமாறன், தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பா.மதன் குமார், மாவட்ட இளை ஞரணி அமைப்பா ளர் விமல் துணை அமைப்பா ளர் தென்பழஞ்சி சுரேஷ்.அணி அமைப்பாளர் பரமசிவம், ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் கூறுகையில்,

    முத்தப்பன்பட்டி விழாவிற்கு வருகை தரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமங்கலம்-ராஜபா ளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.குன்னத்தூரில் வைத்து நாளை காலை 9 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளா னோர் அலை கடலென திரண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் விழாவில் கலந்து கொண்டும் சிறப்பித் திடுமாறு கேட்டுக்கொள்கி றேன் என்றார்.

    தி.மு.க. விழாவை யொட்டி முத்தப்பன்பட்டி யில் திரும்பிய திசையெல் லாம் தி.மு.க. கொடி கள், பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • சிவகங்கையில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 13 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11 ஆயிரத்து 500 வீதம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும் வழங்கப் பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    அடுத்த மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் வருகிற செப்டம்பர் 20ந்தேதி தேவகோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய அட்டை களை பெறுவதற்கு ஏதுவா கவும், மாற்றுத்திறனாளி களுக்கு சலுகைகள் சென்று சேருவதை உறுதி செய்யவும் இந்த முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடனுதவிகள், திருமண உதவி திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000/- வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கு ஏதுவாக அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ள www.tnsevai.gov.in/Citizen Registration என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் விண்ணப் பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட மாற்றுத்திறனா ளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 435 மனுக்களை விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெற்றது. ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்.

    கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 200 பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து செல்வம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணா துரை, மாவட்ட குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, திருலோகி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி, 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 64 ஆயிரத்து 800 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
    • பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஜவ்வாதுமலையில் நடைபெறும் கோடை விழாவில் பங்கேற்க உள்ளார்.

    இதில் கலந்துகொள்ள நேற்று வேலூர் வந்த அவர் வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் இரவு முழுவதும் தங்கினார்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மாதனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மேள தாளங்கள், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆம்பூரில் சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து வாணியம்பாடி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடி கம்பத்தில் கழக கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து செட்டியப்பனூர் கூட்டு ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் திறந்து வைத்தார்.

    ஜோலபேட்டை அருகே மண்டலவாடியில் நடைபெற்ற அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அதனை தொடர்ந்து பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு அருந்த சென்றார்.

    மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    ஆய்வு பணிகளை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1000 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு ஏலகிரிமலையில் ஒய்வு எடுக்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களுக்கும் கட்சி கொடி கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.

    மானாமதுரை

    சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.

    இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
    • தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுரை

    வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மாநில மகளிர் அணி தலைவியு மான அன்னலட்சுமி சகிலா கணேசனின் பிறந்தநாள் விழா மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    இதில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை பாராட்டும் விதமாக கல்வி வளர்ச்சி விருதினை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஹரிஹரன் பிள்ளை மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி மாதவன், தென்னக மக்கள் இயக்கத் தின் நிறுவனத்தலைவர் அய்யப்பன் கார்த்தி, மாநில ஆலோசனை குழு தலைவர் ஆடிட்டர் முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வின் வெள்ளா ளர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வா கிகள், அனைத்து சமூக உறவுகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • 22 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
    • இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 342 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தினார். இதில் வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான மாதாந்திர உதவித்தொகை பெறு வதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்க ளையும் கலெக்டர் வழங்கி னார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த 2 மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 820 மதிப்பிலான காதொலிக்கருவியும், ரூ.7 ஆயிரத்து 900 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.70 ஆயிரத்து 720 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×