search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    17 பயனாளிகளுக்கு ரூ.7.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    17 பயனாளிகளுக்கு ரூ.7.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • 7 பயனாளிகளுக்கு ரூ.7.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர், 358 மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை செய்து மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களும், ஒரு பயனாளிக்கு 3 சக்கர சைக்கிளும், 7 பயனாளி களுக்கு காதொலி கருவி களும் என 17 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 650 மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப் பட்டது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அளவில் பணியிடையே மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிடும் வகையில் மீனாட்சிபுரம் கருப்பையா மகள் சத்தீஸ்வரிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் அலுவலகம், திருவாடனை மற்றும் ராமேசுவரம் கர்ணன் மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    அரசு பள்ளியில் படித்து வரும் மாண-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை 9 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×