search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal meeting"

    • சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது.
    • (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகவே இந்த கூட்டத்தில் சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சார்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெற்கு கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் தெற்கு கோட்டம் மின் செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மின் பகிர்மான தெற்கு வட்டம் செயற்பொறியாளர் தலைமையில் நாளை 25-ந் தேதி (புதன்கிழமை) வள்ளுவர் நகர், ஸ்டேட் பாங்க் எதிரில், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் முருகன் (செங்கம்), சக்கரை (தண்டராம்பட்டு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் ரேணுகா (செங்கம்), சுகுணா (கீழ்பெண்ணாத்தூர்), பரிமளா (தி.மலை), வட்ட வழங்கல் அலுவலர்கள் முனுசாமி (செங்கம்), மணிகண்டன் (கீழ்பென்னாத்தூர்), வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செங்கம் தாசில்தார் முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் மந்தாகினியிடம் வழங்கினர்.

    மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன், வருவாய்த்துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறை செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா்.இதில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான மனுக்கள் வழங்கவும், பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் சங்கத்துக்கு ஒருவா் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாகவும் வழங்கலாம். மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களை கொண்டு வேளாண் உதவி மையமும் இந்த குறைதீா்க்கும் கூட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாசில்தாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
    • குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருகுமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில்:- கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சாதாரண விவசாயிகள் ஆடு, மாடு கொட்டகைகளை மற்றும் வீடு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர். இதனை பி.டி.ஓ.க்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அடிப்படை வசதிகள் ஆடு, மாடு கொட்டகைகளை ஒதுக்கீடு செய்கின்றன.

    இது குறித்து பி.டி.ஓ.க்கள் அடுத்த கூட்டத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை நடத்த விடாமல் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விடுவோம். பி.டி.ஓ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அவர்கள் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேட்டு விவசாயிகள் தாடில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.க்கள் வந்து பதில் சொல்லும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என வலியுறுத்தினர்.

    இதனையடுத்து பி.டி.ஓ.க்களிடம், தாசில்தார் வேண்டா செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள், வேலூரில் நடக்கும் கூட்டத்திற்கு சென்று விட்டதாக கூறினர். இதனை அடுத்து துணை பி.டி.ஓ.க்கள் லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் வேக வேகமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குறித்து (அட்டனன்ஸ்) வருகை பதிவேடு பின்பற்றப்பட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகை தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

    கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறையில் 100 சதவீதம் மானியத்துடன் இலவசமாக கொடுக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த பயனாளி களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் அதனை முழுமையாக தடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

    இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி, 3 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 64 ஆயிரத்து 800 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
    • கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினார்.

    பல்வேறு பகுதிகளி லிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நீர்நிலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.

    கரும்பு அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே ஒரு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சோளிங்கர் ஒன்றியம் மருதாலம்-ஜம்புகுளம் இடைப்பட்ட மையப்பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும்.

    வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்.ஏரிகளிலிருந்து மண் எடுக்க முறையான அறிவிப்புகள் இல்லை. மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) லதா மகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா உள்பட விவசாயிகள், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறறும்.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
    • காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர், நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தக–வலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடக்கிறது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது மின்சார இணைப்பில் வினியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை பல்லடம் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது 15.6.2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல்3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெறஉள்ளது.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம்அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    ×