search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DRO"

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராதாபுரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை மலைப்பகுதி மற்றும் அணைப்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலத்தில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து 1,204.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேப்போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.44 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.70 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69.75 அடியாகவும், கடனா நதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும் உள்ளது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2,756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா இன்று தண்ணீர் திறந்து விட்டனர். தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதி வரை 141 நாட்கள் இந்த தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் அம்பை வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அதேபோல் கொடிமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தினமும் விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி வரை 120 நாட்களுக்கு திறக்கப்படும்.

    இதனால் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    ×