search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்-31-ந் தேதி நடக்கிறது
    X

    நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்-31-ந் தேதி நடக்கிறது

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×